இனி போன் பேச மட்டுமல்ல.. உங்க போன் "நம்பருக்கே" தனியாக கட்டணமா? டிராய் மறுப்பு
சென்னை: இனி பேசுவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்யாமல் மொபைல் எண்களை பயன்படுத்தவும் தனி கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர டிராய் திட்டமிட்டதாக வெளியான செய்திகளுக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த செய்திகளை தற்போது டிராய் மறுத்துள்ளது . அப்படி திட்டம் எதுவும் இல்லை. நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என்று டிராய் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் இந்த மாற்றங்களை செய்ய முடிவு செய்தாக கூறப்பட்டது. தற்போது போன் பேச கட்டணம் செலுத்துகிறோம். இணையம் பயன்படுத்த கட்டணம் செலுத்துகிறோம்.
இனிமேல் பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகளில் கூறப்பட்டது. அதாவது உங்கள் நம்பருக்கு என்று தனியாக இனி கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் இந்த புதிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக செய்திகளில் கூறப்பட்டது.
பரிந்துரை என்ன?: உங்கள் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கு விரைவில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணத்தை அறிமுகப்படுத்த முன்மொழிந்து வருவதாக செய்திகளில் கூறப்பட்டது.
தொலைபேசி எண்கள் மதிப்புமிக்கது என்பதால் அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டது..
ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருவதாக.. மொபைல் எண்களுக்கான கட்டணத்தை மொபைல் சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனகங்கள் மூலம் டிராய் வசூலிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த செய்திகளை தற்போது டிராய் மறுத்துள்ளது . அப்படி திட்டம் எதுவும் இல்லை. நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என்று டிராய் மறுத்துள்ளது.
பல நாடுகளில் உள்ள திட்டம்: ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தொலைபேசி எண்களுக்கு கட்டணம் விதிக்கின்றன. ஆனால் இந்த முறை இந்தியாவில் கொண்டு வரப்படாது என்று டிராய் மறுத்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications