சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்.. ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னை மேல்மருவத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணத்தை தான். சொந்த ஊர் செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பயணிகள் பார்ப்பார்கள். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில வாரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். சாதாரண நாட்களிலேயே பயணிகள் கூட்டம் இப்படி அலைமோதும். ரயில்களை பொறுத்தவரை சரியான நேரத்திற்கு சென்று விடும் என்பதால் பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.
எனினும், அவ்வப்போது சிக்னல் கோளாறு, மற்றும் ரயில்களில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான், இன்று செங்கல்பட்டு வருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
மேல்மருவத்தூர் அருகே ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சிக்னல் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சிக்னல் கோளாறு சீர் செய்யப்பட்டு ரயில் சேவை சீராகும் என்று தெரிகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவதால், திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்தில் செல்லமுடியுமா? என பயணிகள் ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டும் ரயில் எப்போதும் கிளம்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்ததையும் காண முடிந்தது.
இந்த நிலையில், சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. இதனால் ஒவ்வொரு ரயிலாக செல்ல தொடங்கியுள்ளது. பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications