Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்.. ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேல்மருவத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருவத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணத்தை தான். சொந்த ஊர் செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பயணிகள் பார்ப்பார்கள். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

Trains to southern districts stopped due to signal failure

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில வாரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். சாதாரண நாட்களிலேயே பயணிகள் கூட்டம் இப்படி அலைமோதும். ரயில்களை பொறுத்தவரை சரியான நேரத்திற்கு சென்று விடும் என்பதால் பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.

எனினும், அவ்வப்போது சிக்னல் கோளாறு, மற்றும் ரயில்களில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகி பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான், இன்று செங்கல்பட்டு வருகே மதுராந்தகத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

மேல்மருவத்தூர் அருகே ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோத்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மேல்மருத்தூர் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சிக்னல் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சிக்னல் கோளாறு சீர் செய்யப்பட்டு ரயில் சேவை சீராகும் என்று தெரிகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவதால், திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்கு சரியான நேரத்தில் செல்லமுடியுமா? என பயணிகள் ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டும் ரயில் எப்போதும் கிளம்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்ததையும் காண முடிந்தது.

இந்த நிலையில், சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. இதனால் ஒவ்வொரு ரயிலாக செல்ல தொடங்கியுள்ளது. பயணிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+