வெள்ளத்தில் மூழ்கிய வண்டிகளை ஸ்டார்ட் பண்ணிடாதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து ஆணையர் அட்வைஸ்!
சென்னை: வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம் என நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையின் காரணத்தினால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரையிலும் முழுவதுமாக வெள்ளநீர் வடியாமல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படிப்படியாக தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயங்க துவங்கி விட்டன. ஆனால், திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் தற்போது வரையிலும் போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவை சீரமைக்கப்பட்ட பிறகே போக்குவரத்து முழுமையாக இயங்கத் தொடங்கும்.
கனமழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், வெள்ள நீரில் மூழ்கி ஏராளமான வாகனங்கள் பழுதுபட்டுள்ளன. பல வாகனங்கள் நீரில் முழுமையாக முழுகிவிட்டதால் பழுதகியுள்ள நிலையில், அதை சரி செய்யும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம். மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றும் மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications