டிடிவி தினகரன் உடன் இணையும் ஓபிஎஸ்! அடுத்து சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் அறிவிப்பு!
சென்னை: ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்துள்ளனர். இதில் அவர்கள் வேறு சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்திருந்தனர்.
இன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றுள்ளார்.
டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

முக்கிய சந்திப்பு: இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இத்தனை காலம் தனித்தனியாகச் செயல்பட்டனர். இப்போது அதே லட்சியத்தை அடைய இருவரும் கூட்டாகச் செயல்பட உள்ளனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எப்படி ஒரு working arrangement வைத்துச் செயல்படுகிறார்களோ.. அதேபோல இனிமேல் இருவரும் செயல்படுவார்கள்" என்றார்.
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை என்று தெரிவித்த அவர், இரு தண்டவாளத்தைப் போலச் சட்ட ரீதியான போராட்டம் தொடரும் என்றும் தொண்டர்களுடன் இதுபோல பயணிப்பதும் தொடரும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அதிமுக எதிர்காலம்: தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "கடந்த காலங்களைப் பற்றிப் பேசக் கூடாது. கடந்த காலங்களைப் பற்றிப் பேசினால் உணர்ச்சி மேலிட்டுப் பிரிவும் பேதங்களும் தான் வரும். நாம் இனி எதிர்காலத்தைப் பற்றியே பேச வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால் நீங்கள் இதைச் சொன்னார்கள் அதைச் சொன்னீர்கள் என்றே பேச்சு இருக்கும். அது கட்சியை வளர்க்கப் பயன்படாது.
எனவே, தான் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடக்கப் போகும் செயல்கள் நல்லவையாகவே இருக்கட்டும். இனி நாம் அதிமுக எதிர்காலம் குறித்தே பேச வேண்டும். கடந்த கால பேச்சுகள் குறித்துப் பேசத் தேவையில்லை.

சுயநலம்: எடப்பாடி பழனிசாமி சுயநலமாக யாரையும் சேர்க்காமல் செயல்பட்டு வருகிறார்.. எடப்பாடி தரப்பினர் தான் பாஜகவுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். பாஜகவில் இருந்து யாரும் இந்த கூட்டணியை உறுதி செய்யவில்லை. எனவே, கூட்டணி குறித்து எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்றே இரு தலைவர்களும் இன்று சந்தித்து உள்ளனர் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளதாகவும் ஜெயலலிதா காலத்து அதிமுகவைக் கொண்டு வரவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு வரும் காலங்களில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பிற்கு அதிமுக வட்டாரங்கள் என்ன சொல்லப் போகிறது என்பது குறித்தும் பெரும் எதிர்பார்ப்பே நிலவி வருகிறது.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications