Sasikala: 3 மாதத்தில் புதிய கட்சி தொடங்க முடியாது! சசிகலாவை நம்பாதீர்கள்! மறைமுகமாக தினகரன் அட்டாக்
சென்னை: 3 மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதற்கு சாத்தியமே இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மறைமுகமாக சசிகலாவை விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ஓபிஎஸ்ஸையும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
தஞ்சையில் கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, திமுகவில் இணைவது அவரது தனிப்பட்ட விருப்பம்.

தொண்டர்கள் தெய்வமாக போற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியது கோடிக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் மக்கள் பணியார்ற வேண்டும் என்றால் இன்னொரு கட்சிக்கு செல்லலாம்.
ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பரதனாக நடித்துவிட்டு அவரது மறைவுக்கு பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக 2017ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்.
எனினும் ஓபிஎஸ்ஸை பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் பேசி துணை முதல்வர் பதவியில் ஓபிஎஸ்ஸை உட்கார வைத்தார். ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்த போது கட்சியின் சட்டத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்றால் எதையும் செய்ய துணிந்து விட்டார். ஓபிஎஸ் திமுகவில் சேரட்டும், பதவிக்கு வரட்டும், வராமலும் போகலாம். ஆனால் இதை மக்கள் தீர்மானிப்பார்கள். எம்ஜிஆர். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்பதை மன்னிக்கவே முடியாது.
இதைவிட சிறப்பு, துரியோதன கும்பல் போல பேசியதை முதல்வர் கைத்தட்டி ரசித்தது புன்முறுவலாக இருந்தது. இதற்கேற்ப ஓ.பி.எஸ்., ஐயப்பன் இருவரும் நடந்துகொண்டது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் இதைவிட தீங்கை யாரும் இழைக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய குறைந்தது 6 மாதங்கள் ஆகும். என்னதான் அவசரப்படுத்தினாலும் 3 மாதங்களில் அது முடியாது. எனவே யாராவது உங்களிடம் கட்சி ஆரம்பிப்பாக சொன்னால் அதை நம்ப வேண்டாம் என சசிகலாவின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக சாடினார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி சசிகலா புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அன்றைய தினம் அவரது கட்சியில் அதிமுக, அமமுகவில் அதிருப்தியில் இருப்போர் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் 30 தொகுதிகளை குறி வைத்து கட்சி தொடங்கியதும் தவெகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.
சசிகலா தனிக்கட்சி தொடங்கி வரும் தேர்தலில் குறி வைக்காவிட்டாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் குறி வைக்க வாய்ப்பிருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய கட்சி மூலம் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் அமமுகவில் இருப்போரையும் சசிகலா, அக்கட்சியில் இணைத்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications