சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பு உண்மைதான்.. நடிகை ரேகா நாயர் ஓபன் டாக்
சென்னை: சின்னத்திரை நடிகையும் விஜேவுமான சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பிருந்தது உண்மைதான். ஆனால் அவளது இறப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா மரணமடைந்த நாள் முதல் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார். அந்த வகையில் சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என காவல் நிலையத்தில் ஹேமந்த் புகார் அளித்தார்.
சித்ராவின் மரணத்தில் மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர், சின்னத்திரை நடிகர், மாஃபியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் சித்ராவின் தோழி ரேகா நாயர் தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஹேமந்த்
அதில் சித்ராவும் ஹேமந்தும் தனியாக வீடு எடுத்து தங்கிருந்தார்கள். அங்கு நான் சென்றிருந்தேன். அப்போது அந்த வீட்டில் ஆணுறைகள் இருந்தது. கணவன், மனைவியாக இருக்கும் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் எதற்காக ஆணுறைகள் என்ற கேள்வி என்னுள் எழுந்துள்ளது.

மாஜி எம்எல்ஏ
சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவுடன் தொடர்பு இருந்தது. அது உண்மைதான். ஆனால் ஹேமந்த் சொல்வதை போல் சித்ரா மரணத்திற்கும் அந்த எம்எல்ஏவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்ராவுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. மது குடிப்பாள், சிகரெட் என நிறைய கெட்ட பழக்கங்கள் சித்ராவுக்கு இருந்தது.

அவசர பதிவு திருமணம்
இதுவும் அவர் அவசரமாக பதிவு திருமணம் செய்ய காரணமாக இருந்தது. சித்ராவின் உடலை முழுவதுமாக பிரேத பரிசோதனை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நிச்சயம் அவரது இறப்பிற்கு என்ன காரணம் என தெரிந்திருக்கும். சித்ரா உயிருடன் இல்லை என்பதால் ஹேமந்த் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள பொய் சொல்லி வருகிறார்.

ஹேமந்த்
சித்ரா மரணத்தின் போது காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அவரது ஹேண்ட் பேக்கில் கஞ்சா உள்ளிட்டவை இருந்தது. இதை ஹேமந்திடம் காட்டி போலீஸார் கேள்வி எழுப்பிய போது அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹேமந்த் சொல்லியிருந்ததாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications