உங்க ஆட்சி எதுக்கு சார்.. சாரி மட்டும்தான் கேட்க தெரியும்.. ஸ்டாலின் மீது விஜய் சரமாரி அட்டாக்!
சென்னை: அஜித் குமார் விவகாரத்தில் ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க, இப்போது 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க, உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்? உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள், என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.
விஜய் தனது பேச்சில், மடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். சாதாரண குடும்பத்திற்கு நடத்த கொடுமைக்கு நீதி வேண்டும். ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க. அஜித் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்தது போல இங்கேயும் கொடுங்கள். சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்?

அதே ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து இருக்கும் சிபிஐ கிட்ட போய் ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க? ஏன் எஸ்ஐடி அமைக்கவில்லை?. ஒன்றிய அரசின் ஆட்சிக்கு பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். உங்களை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா நீங்க எதுக்கு சார்?. உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்?
உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள். நீங்கள் சாரி மட்டும்தான் சொல்ல முடியும்.. உங்களால் வேறு என்ன சொல்ல முடியும்.. உங்கள் ஆட்சி சாரி மாடல் ஆட்சியாக மாறிவிட்டது., என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.
விஜய் பேரணி
சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். இந்த பேரணியில் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் மேடை ஏற்றினார். மேடையிலேயே தமிழக அரசுக்கும், கஸ்டடி மரணங்களுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சுமார் 5 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்று வருகின்றன.
இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை கமிஷனர் அருண் இதை மறுத்து இருந்தார் .
இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தவெக மூலம் மிகப்பெரிய பேரணி சென்னை சிவானந்தா சாலையில் நடத்தப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications