1000 யுவராஜ்.. சர்ச்சையை கிளப்பிய பாஜக கட்டெறும்பை தூக்கிய போலீஸ்.. மன்னிப்பு கடிதம்? நடந்தது என்ன?
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல். கல்லூரி படித்து வந்த இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் 2015ம் ஆண்டு இவர் தொட்டி பாளையம் அருகே இருக்கும் ரயில் தண்டவாளம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த கொலையில் யுவராஜுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர். சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர்தான் யுவராஜ். இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் இந்த வழக்கில் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வருடம் மார்ச் 5ம் தேதி யுவராஜ் மற்றும் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது அருண் (கார் ஓட்டுனர்) சகோதரர்கள் குமார், சதிஷ் ஆகியோரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 8ம் தேதி காலை தண்டனை விவரங்கள் வெளியானது.
ஆயுள் தண்டனை: அதில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளி அருணுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, கிரிதர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கூடுதல் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் 10 பேர் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மற்றும் 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுலராஜ் தாயார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.
கைது: இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.
ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரை கைது செய்து போலீசார் ரிமாண்ட் செய்தனர். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட் விசாரணையில் இசக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து கண்டிஷன் பெயிலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications