எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அலறிய அரும்பாக்கம்.. நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதை வழக்கில்.. திருப்பம்
சென்னை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட கெவின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கைது செய்து அரும்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது. போதைப் பொருள் விநியோக வழக்கில் ஸ்ரீகாந்த் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூளைமேடு காவல்துறையினர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய இந்த போதைப் பொருள் வழக்கில் இதுவரை 25 நபர்களைக் கைது செய்துள்ளனர். நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கையாகும்.
நடிகர் கிருஷ்ணா கைது - தொடரும் நடவடிக்கைகள்
நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார். கெவின் என்ற நபரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கானா நாட்டிலிருந்து போதைப் பொருள் இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்த வலையமைப்பு பெரிய அளவில் நீண்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் யார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் ஒரு கடுமையான குற்றமாகும். இந்திய சட்டத்தின் கீழ், போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. போதைப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீப காலமாக, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதால் தனிநபர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இழக்க நேரிடுகிறது, மேலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் இது வழிவகுக்கிறது. போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரும், போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் வெளியிட்ட லிஸ்ட்
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், தேடப்பட்டு வந்த நிலையில், தொடர் புலன் விசாரணையின் நிகழ்வாக, அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பேரில் ஜெஸ்வீர் (எ) கெவின் என்பவர் இன்று ( 26.06.2025) ம் தேதி (1) Cocaine 1/2 Grams, 2)Methamphetamine-10.30 Grams, 3)MDMA 02.75 grams, 4) OG Ganja 2.40 grams, 5) Ganja 30 grams, 6) OC Paper 40 grams, 7) Ziplock Cover-40 Grams, 8) Weight Machine Small -2, 9) laptop -1, 10) Cellphone-1, 11) Rs.45,200 கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேலும் போதைப்பொருள் உட்கொள்பவருடன் WhatsApp குழுக்களில் இணைந்து அது சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
இவர்களுடைய வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள். விசாரணை சாட்சியங்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும், மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றிய தகவல் தெரிந்தும். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என்றுள்ளனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications