புறநகர் ரயிலில் அசந்து தூங்கிய பெண்.. தாம்பரம் ஷெட்டில் வைத்து பலாத்காரம் செய்த இரு ஊழியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பரனூரை சேர்ந்தவர் 40 வயது பெண். பழ வியாபாரியான இவர் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் ரயிலில் பயணம் செய்து பழ வியாபாரத்தை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடற்கரை டூ செங்கல்பட்டு செல்லும் அந்த ரயிலில் அந்த பெண் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு நேரத்தில் ஏறினார்.

தாம்பரம்

தாம்பரம்

இந்த நிலையில் அவர் மிகவும் அசதியாக இருந்ததாலும் மயக்கம் வந்ததாலும் ரயிலில் தூங்கிவிட்டார். இதனால் அவர் இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டார். அந்த ரயில் செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் தாம்பரம் ஷெட்டிற்கு வந்தது.

மயக்க நிலை

மயக்க நிலை

அப்போது சுரேஷ் மற்றும் அப்துல் ஏஜீஸ் ஆகிய இரு ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு பெட்டியாக பராமரிப்பு பணிக்காக சென்றனர். அப்போது அந்த பெண் பழ வியாபாரி மயக்க நிலையில் கிடந்ததை இருவரும் கண்டனர்.

போலீஸில் பிடித்து

போலீஸில் பிடித்து

பின்னர் அந்த பெண்ணை இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதும் அந்த பெண் அவர்களை தடுத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் ரயிலில் சில பொருட்களை திருடிவிட்டதாக புகார் கொடுத்து உன்னை போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கைது

கைது

இதையடுத்து அந்த பெண் தாம்பரம் ரயில்வே போலீஸை நாடினார். அவர்கள் இருவர் மீது புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பெண்ணை இரு ஊழியர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+