ஆளுநர் உரை..சட்டசபையில் தீர்மானம்.. மரபை காத்த முதல்வர் ஸ்டாலின்.. நன்றி சொன்ன உதயநிதி
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது; சட்டமன்ற மரபைக் காத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை இன்று தொடங்கியது முதலே கூச்சல் குழப்பம் நிலவியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கும் போதே திமுக கூட்டணி கட்சியினர் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து கூச்சலிட்டனர். அந்த களேபரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் உரையை வாசித்தார்.
மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் ரவியின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அளித்த உரையில் இருந்த சில பகுதிகளை விட்டு விட்டு வாசித்து முடித்தார். உடனே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

திராவிடம், தமிழ்நாடு, அமைதிப்பூங்கா தமிழ்நாடு என அரசு எழுதி கொடுத்த உரையில் இருந்தவைகளை வாசிக்காமல் ஆளுநர் புறக்கணித்து விட்டதாக திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆளுநர் வாசித்த உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே அவைக்குறிப்பில் எடுத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருக்கும் போதே விறுவிறுவென்று சட்டசபையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரைக்கும் நடக்காத சம்பவங்கள் இன்றைக்கு அரங்கேறின. ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் கருத்து கூறினர்.
இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற வேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது; சட்டமன்ற மரபைக் காத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications