Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்யை பரப்புறாரு உதயநிதி.. 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துட்டாங்க.. எடப்பாடி தரப்பு பரபர வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னைப் பற்றி அவதூறாக உதயநிதி பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பரபர வாதங்களை எடுத்து வைத்தது. இதையடுத்து, கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

Udhayanidhi stalin defamed about me more than 6 lakh people watched that:EPS argument

மேலும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுத்தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எடப்பாடி வழக்கு: உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தன்னைப் பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்தார்.

Udhayanidhi stalin defamed about me more than 6 lakh people watched that:EPS argument

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட தன்னை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை எனவும், விசாரிக்கப்படவில்லை எனவும், அரசு இயந்திரம் அவர்கள் வசம் தான் உள்ளதால், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் விசாரித்திருக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

எடப்பாடி தரப்பு வாதம்: மேலும், எடப்பாடி பழனிசாமி மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. திமுக முக்கிய நிர்வாகி 2018ல் அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் தெரிவித்ததாகவும், அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

Udhayanidhi stalin defamed about me more than 6 lakh people watched that:EPS argument

இடைக்கால தடை: இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிடக் கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கவும் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது திமுகவினர் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+