வெளிநாடு பறக்கும் ஸ்டாலின்.. கண்ட்ரோல் எடுக்கும் உதயநிதி.. கைக்கு வரும் பவர் பவர்.. பின்னணி!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முதல்வருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் நாட்களில் அதை பெரும்பாலும் கவனிப்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். முக்கியமாக சென்னை, தென் மாவட்ட வெள்ளத்தில் இருந்து ஆட்சி நிர்வாகத்தில் பெரும்பாலும் பணிகளை கவனித்துக்கொள்வது உதயநிதி ஸ்டாலின்தான்.

துணை முதல்வர்: இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூட கூறப்பட்டது. ஆனால் துணை முதல்வர் பதவிக்கு முன்பாக அவருக்கு கட்சிப்பணியை முழுமையாக கவனிக்கும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியின் உயர் கல்வித்துறை பொறுப்பு செல்வதற்கு கூட உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்று கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும், கட்சி பணியை கவனிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாது என்பதாலும், அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை முழுமையாக நம்பமுடியாது என்பதாலும் தனது நண்பர் அன்பகம் கலையை அறிவாலயத்துக்குள் கொண்டுவந்தார் ஸ்டாலின்.
என்ன பணி?: 2021 ஜூலையில், திமுகவின் துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் கலை. தமிழ்நாடு முழுவதும் வருகிற கட்சி தொடர்பான புகார்களை கவனிக்கவும், அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் மீதான புகார்கள் இருப்பின் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கலைக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின்.
அதன்படி, கட்சி பஞ்சாயத்துகளை கவனித்து வந்தார் கலை. இந்தநிலையில், உதயநிதி அமைச்சரானதை அடுத்து, அரசு நிர்வாக ரீதியிலான முக்கிய விசயங்களை கவனிக்கும் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை என்ற முக்கியமான துறை உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கவனித்து வரும் பல முக்கிய பொறுப்புகளையும், கட்சி ரீதியிலான பிரச்சனைகளை கூடுதலாக கவனிக்கும் படியும் உதயநிதியிடம் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.
வெளிநாடு பயணம்: முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
சில முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த பயணத்திற்கு இடையில்தான் தமிழ்நாட்டில் முக்கியமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனித்துக்கொள்ள உள்ளார்.
கட்சி பணிகள்: கடந்த சில காலமாகவே அதன்படி, ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் இரண்டையும் கவனித்து வந்தார் உதயநிதி. இதனால், உதயநிதி தங்கியிருக்கும் குறிஞ்சி இல்லத்தில் தினந்தோறும் அதிகாரிகளினுடனான ஆலோசனையும், கட்சி ரீதியிலான பஞ்சாயத்துகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தொடர்பான முழுமையான பணிகளையும் பிரச்சனைகளையும் கவனிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.
இதனால், குறிஞ்சி இல்லத்தில் கட்சி பிரச்சனைகளை கவனிப்பதைவிட தினமும் அறிவாலயம் வந்து கவனிக்கச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்கிறது அறிவாலய தரப்பு. அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ளவிருகிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கூடுதல் பொறுப்பு: தேசிய அரசியலில் பாஜக கட்சி மற்றும் பாஜகவின் டாப் தலைவர்கள் திமுகவை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில்தான் அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தற்போது ஆட்சியில் நிர்வாக ரீதியாக முக்கியமான பல நிகழ்வுகளை கவனித்துக்கொள்கிறார். முக்கிய முடிவுகளை எடுப்பது எல்லாம் பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின்.இனி கட்சி பணிகளில் உதயநிதி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications