அதிர வைத்த பறை.. ஓங்கி ஒலித்த இசை.. இது கவுசல்யா வாழ்வின் போராட்ட கீதம்!
உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video

சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனியாக சட்ட போராட்டம் மூலம் போராடிய கவுசல்யா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்.
அதன்பின் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

மரியாதை செய்தனர்
இதையடுத்து தம்பதிகள் நேராக சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர். கோவை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர். இந்த திருமணம் சடங்குகள் இன்றி இணையேற்பு விழா என்ற பெயரில் கருப்பு உடை அணிந்து நடந்த சுயமரியாதை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுசல்யா இசை
அதன்பின் நிமிர்வு கலையக பறையிசை கலைஞர்களுடன் சேர்ந்து அதன்பின் கவுசல்யா பறையிசைத்தார். சக்தியும் அவர்களுடன் உடன் இருந்தார். அவர்கள் பறையை இசைத்துவிட்டு பறை கலைஞராய் பெருமை கொள்வோம் என்று கோஷமிட்டனர். இது நிகழ்வு வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

சந்தோசம்
சமூக வலைத்தளங்களில் பலர் இதை பாராட்டி இருக்கிறார்கள். கவுசல்யா இப்படி சந்தோசமாக இருப்பதை பார்க்க மகிழ்வாக உள்ளது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போதும் கேட்கும்
'''அனல் காயும் பறையோசை, என் வாழ்வின் கீதம் ஆகிடுமே'' என்று மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகளை போல, இந்த பறையோசையும் கவுசல்யாவின் வாழ்க்கை கீதம் போல அங்கு ஓங்கி ஒலித்தது. இந்த ஓசை சாதிய கொடுமைகளுக்கு எதிராக என்றும் ஒலிக்கும் என்று எதிர்பார்ப்போம்.












Click it and Unblock the Notifications