Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி கைரேகை தேவையில்லை.. வந்தாச்சு டிஜிட்டல் ஆதார் அட்டை.. இண்டெர்நெட் கூட வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த ஆதார் செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், ஒரிஜினல் ஆதார் கார்டுக்கு பதிலாக டிஜிட்டல் ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

நாட்டு மக்களின் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாக ஆதார் கார்டு விளங்குகிறது. அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் இருந்து வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பான் கார்டு வாங்குவதற்கு, பாஸ்போர்ட் பெறுவதற்கு, செல்போன் எண் வாங்க என எல்லாவற்றிற்கும் இப்போது ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

Aadhaar App UIDAI Digital Aadhaar

ஆதார் கார்டு

இந்த நிலையில் ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், காகித ஆதார் அட்டை கையில் இல்லாமலும் வங்கி கணக்கு தொடங்க, செல்போன் எண் பெற என பல தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு லேமினேஷன் செய்தோ அல்லது தனியாக பைல் செய்து வைத்துக்கொண்டோ வெளியில் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஒரு சில இ ஆதார் மூலமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வந்தனர். இப்படி இருக்கும் போது இணையதளம் இல்லாத நேரத்திலோ அல்லது ஆதார் அட்டை இல்லாமல் இருந்தாலோ நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சினையாக இருந்து வந்தது.

புதிய ஆதார் செயலி

இந்த நிலையில் தான் தற்போது புதிதாக ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்த ஆப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பினை நாம் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் முக அங்கீகாரம் செய்து அதனை செயலி ஏற்றுக்கொண்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும். பின்னர் இதை வைத்து நாம் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரிஜினல் ஆதார் கார்டு போல

அதாவது இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு போலவே செல்போன் எண் பெறுவதற்கோ, வங்கி கணக்கு தொடங்குவதற்கோ, என ஆதாரை வைத்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இந்த ஆப்பை வைத்து செய்துவிட முடியும். இண்டர்நெட் இல்லாத போதும் நாம் இதனை ஒரிஜினல் ஆதார் கார்டு போல பயன்படுத்தி கொள்ளலாம். கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம்.

அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதும். அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோடினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது. மேலும் இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

பாதுகாப்பு கருதி இந்த செயலியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின், டிஜிட்டல் பாஸ்வேர்டு என நம் தேவைக்கு ஏற்ப எதாவது ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டை போட்டுக்கொள்ளலாம். ஆதார் கார்டை கையில் தூக்கிக்கொண்டு செல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தியே ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+