இனி கைரேகை தேவையில்லை.. வந்தாச்சு டிஜிட்டல் ஆதார் அட்டை.. இண்டெர்நெட் கூட வேண்டாம்
சென்னை: ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த ஆதார் செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், ஒரிஜினல் ஆதார் கார்டுக்கு பதிலாக டிஜிட்டல் ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
நாட்டு மக்களின் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாக ஆதார் கார்டு விளங்குகிறது. அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் இருந்து வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பான் கார்டு வாங்குவதற்கு, பாஸ்போர்ட் பெறுவதற்கு, செல்போன் எண் வாங்க என எல்லாவற்றிற்கும் இப்போது ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

ஆதார் கார்டு
இந்த நிலையில் ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், காகித ஆதார் அட்டை கையில் இல்லாமலும் வங்கி கணக்கு தொடங்க, செல்போன் எண் பெற என பல தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு லேமினேஷன் செய்தோ அல்லது தனியாக பைல் செய்து வைத்துக்கொண்டோ வெளியில் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஒரு சில இ ஆதார் மூலமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வந்தனர். இப்படி இருக்கும் போது இணையதளம் இல்லாத நேரத்திலோ அல்லது ஆதார் அட்டை இல்லாமல் இருந்தாலோ நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சினையாக இருந்து வந்தது.
புதிய ஆதார் செயலி
இந்த நிலையில் தான் தற்போது புதிதாக ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்த ஆப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பினை நாம் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் முக அங்கீகாரம் செய்து அதனை செயலி ஏற்றுக்கொண்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும். பின்னர் இதை வைத்து நாம் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரிஜினல் ஆதார் கார்டு போல
அதாவது இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு போலவே செல்போன் எண் பெறுவதற்கோ, வங்கி கணக்கு தொடங்குவதற்கோ, என ஆதாரை வைத்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இந்த ஆப்பை வைத்து செய்துவிட முடியும். இண்டர்நெட் இல்லாத போதும் நாம் இதனை ஒரிஜினல் ஆதார் கார்டு போல பயன்படுத்தி கொள்ளலாம். கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம்.
அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதும். அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோடினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது. மேலும் இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
பாதுகாப்பு கருதி இந்த செயலியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின், டிஜிட்டல் பாஸ்வேர்டு என நம் தேவைக்கு ஏற்ப எதாவது ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டை போட்டுக்கொள்ளலாம். ஆதார் கார்டை கையில் தூக்கிக்கொண்டு செல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தியே ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications