78 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
சென்னை: கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் அனைத்து பொதுப் போக்குவரத்தும் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டன. லாக்டவுன்கள் நீட்டிக்கப்பட்ட போதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளும் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கச் செயலாளர் தர்மராஜ் கூறுகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும்; பேருந்து இருக்கைகளின் அடிப்படையில் 60 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து 78 நாட்களுக்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்களே தொடர்ந்தும் பெறப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications