Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் உணவகங்களை திறக்க அரசு அனுமதி... பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று (திங்கள் கிழமை) முதல் உணவகங்கள், உணவு விடுதிகள் திறக்க தமிழகு அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ள அரசு , உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்.. என்னென்ன கட்டுபாடுகள்?

    தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானவை, பேருந்துகள் இயக்கம், மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களை திறக்க அனுமதி, உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை திறக்க அனுமதித்துள்ளது.

    unlock 1: Government permission to open restaurants from tomorrow , this guidelines to follow

    அத்துடன் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ளது. எனினும் உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதை அரசு அறிவித்துள்ளது. கீழ் கண்ட நிபந்தனைகளை பின்பற்றித்தான் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் இயங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

    • உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்
    • உணவகங்கள், உணவு விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்தல் வேண்டும்.
    • உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு அல்லது சானிடைசர் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.
    • உணவகங்களில் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
    • உணவகங்களில் உணவருந்தும் மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
    • உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை பயன்படுத்தவே கூடாது.
    • உணவகங்களில் ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
    • நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
    • உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
    • உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
    • உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
    • பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
    • உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
    • உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
    • அரசால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • அரிசி, பருப்பு, காய்கறிகள், போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்".

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+