நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 3 மாத பச்சிளம் பெண் குழந்தைதான் மிராக்ளின் ரியானா. இக்குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கடுமையான உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இக்குழந்தையை உடனே காப்பாற்ற உதவுங்கள்.

பிறந்த சில நாட்களிலேயே மிராக்ளினுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது.

tamil nadu hospital

இதை பார்த்து பயந்த பெற்றோர், உடனடியாகக் குழந்தை ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு 'டவுன் சிண்ட்ரோம்' குறைபாட்டுடன் சேர்த்து, தீவிரமான பிறவி இதய நோயும் இருப்பதை உறுதி செய்தனர். தங்களின் ஒரே குழந்தையைக் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், அவளது பெற்றோர் பிற மருத்துவ நிபுணர்களை அணுகி விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில், மிராக்ளின் 'கம்ப்ளீட் பேலன்ஸ்டு ஏட்ரியோவென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட்' என்ற ஆபத்தான இதயப் பாதிப்பால் குழந்தை அவதியுற்று வருவது உறுதியானது. இது ஒரு தீவிரமான பிறவி இதயக் குறைபாடாகும். இதில் இதயத்தின் அறைகளுக்கு இடையே பெரிய துளைகள் காணப்படுவதால், இரத்த ஓட்டம் சீரற்று மாறி, குழந்தையின் சிறிய இதயம் மற்றும் நுரையீரலுக்குக் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலில், உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால், அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடிவதோடு, அவளது எதிர்கால வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும்.

tamil nadu hospital

குழந்தைக்குச் சிறந்த சிகிச்சையை வழங்க விரும்பிய அவளது குடும்பத்தினர், சென்னை மியாட் மருத்துவமனையை அணுகினர். குழந்தையைப் பரிசோதித்த அங்கிருந்த குழந்தை மருத்துவ இதயக் குழுவினர், இந்த இதயக் குறைபாட்டைச் சரிசெய்து மிராக்ளினுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்க 'அவசர ஏவிஎஸ்டி சீரமைப்பு அறுவைச் சிகிச்சை' செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இதய அறுவைச் சிகிச்சை, தீவிரக் கண்காணிப்புப் பிரிவு கட்டணம், மருத்துவமனை தங்குமிடச் செலவு, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் என அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் ரூ. 4,50,000 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிராக்ளினின் தந்தை ரவிச்சந்திரன் தனியார் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் ஆகப் பணிபுரிந்து, மாதத்திற்கு வெறும் ரூ. 15,000 மட்டுமே சம்பாதிக்கிறார். குழந்தையின் தாய் மோனிஷா, மருத்துவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கும் தன் குழந்தையை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால், தனது வேலையை விட நேர்ந்தது.

tamil nadu hospital

தற்போது இக்குடும்பம் ஒரே ஒரு சிறிய வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் சூழலில், நாளுக்கு நாள் உயரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது. தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளைச் செய்தும், அறுவைச் சிகிச்சைக்கான இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது அந்தப் பெற்றோரால் இயலாத ஒன்றாக உள்ளது.

பெற்றோராகத் தங்களின் குழந்தையைக் காப்பாற்ற அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டனர், ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களால் தனியாகப் போராட முடியாது. எனவே குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்களின் நிதியுதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது குழந்தை மிராக்ளின் ரியானா அவசரமாகப் பெற வேண்டிய உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்கு அவளை ஒருபடி நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+