நடந்து வந்தவர் திடீர்னு பஸ்ஸில் ஏறிட்டார்.. பயணிகள் குழம்ப.. வேட்பாளர் விழிக்க உத்தரமேரூரில் கூத்து!
உத்தரமேரூர் அதிமுக வேட்பாளரின் பிரச்சாரம் இணையத்தில் வைரலாகிறது
சென்னை: ஆர்வ கோளாறு காரணமாக, வேட்பாளர் ஒருவர் பஸ்ஸில் ஏறிவிட்டார்.. இவர் பஸ்ஸில் ஏறியதுதான் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் களை கட்டி உள்ளது.. இந்த முறை திமுக - அதிமுக இரு தரப்புமே, வேட்பாளர்களை பார்த்து பார்த்து தயார் செய்துள்ளது..
சீட் கிடைக்காதவர்கள் ஒரு பக்கம் விரக்தியில் இருந்தாலும், சீட் கிடைத்தவர்கள், விட்ட வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்க்கட்டுகள்
இதற்காக சாலைகள், பொது இடங்கள், கடைகள், மார்க்கெட்டுகள், டீக்கடைகள் என ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுழன்று சுழன்று வாக்கு கேட்டு வருகிறார்கள்.. இப்படித்தான் ஒரு வேட்பாளர் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டார்.. உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சோம சுந்தரம் போட்டியிடுகிறார்.. இவர் முன்னாள் அமைச்சரும் கூட.

பிரச்சாரம்
தன்னுடைய ஆதரவாளர்களுடன் மெயின் ரோட்டில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.. அங்கு சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் துண்டு பிரசுரங்களை தந்துகொண்டே , தனக்கு ஓட்டு போடும்படி கேட்டு கொண்டே வந்தார்... அந்த நேரம் பார்த்து ஒரு பஸ், அங்கே பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது.. அந்த பஸ்ஸை பார்த்ததும் டக்கென ஏறி கொண்டார் சோமசுந்தரம்.

நோட்டீஸ்
அவர் ஏறியதும், அவருக்கு பின்னாடியே அவரது ஆதரவாளர்களும் ஏறி கொண்டனர்.. பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் நோட்டீஸை தந்து, தனக்கு ஓட்டு போடும்படி சொன்னார்.. அங்கிருந்த பயணிகளோ, தாங்கள் வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.. அப்போதுதான் தெரிந்தது, சோமசுந்தரம் ஏறியது வெளிமாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் ஏறி உள்ளது..

ஆர்வ கோளாறு
ஆர்வ கோளாறில் இவ்வாறு ஏறியுள்ளார்.. அதன்பிறகு ஒருவழியாக சுதாரித்து கொண்ட அவர், இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இந்த பஸ்ஸில் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி சமாளித்தபடியே கீழே இறங்கினார்.. இந்த வீடியோதான் படுவைரலாகி வருகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகிறதோ?












Click it and Unblock the Notifications