நாங்க கேட்ட முதல் சங்கீதம்! கரும்பலகையில் உங்கள் சாக்பீஸ் சத்தம்! ஆசிரியர்களுக்கு வைரமுத்து புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

vairamuthu teachers day tamil nadu

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிதை நடையில் ஆசிரியர்கள் தின வாழ்த்துகளை கூறியுள்ளார். கரும்பலகையில் ஆ என எழுதப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: ஆசிரியப் பெருமக்காள்!
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம் உங்களை

எங்கள் சூரியோதயம்
உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது

உங்கள் சொற்களில்
இருள் உடைந்தது

எம்.ஜி.ஆரும் சிவாஜியும்
உச்சத்திலிருந்தபோது
நீங்களே எங்கள்
கதாநாயகர்கள்

நாங்கள் கேட்ட
முதல் சங்கீதம்
கரும்பலகையில் உங்கள்
'சாக்பீஸ்' சத்தம்

உங்களைக் கடக்கையில்
நெஞ்சு கடக்குமே
ஒரு மெல்லிய அச்சம்
அதுதான்
உங்கள் மதிப்பின் உச்சம்

தேர்வுத் தாளில்
எப்போதேனும் எழுதுவீர்களே
'நன்று' என்று
ஆகா!
ஒற்றைச் சொல்லில்
ஒருபுட்டி ரத்தம்

vairamuthu teachers day tamil nadu

உங்கள் கிளையிற்
பழுத்த பழங்கள்
எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக
உங்கள் வேர்கள் மட்டும்
இங்கே...
ஆங்காங்கே...

ஓய்வுறுநாளில்
கல்விக் கூடத்தில் பதிந்த
உங்கள் கடைசிப் பார்வையும்
விடைபெறுநாளில்
உங்களை நாங்கள் பார்த்த
கண்ணீர்ப் பார்வையும்
வேறு வேறல்ல

ஆண்டு பல
நீண்டு வாழ்வீர்
ஐயன்மீர்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் தங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+