பட்டுக்கோட்டை, கண்ணதாசனுக்கு சீனியர்! மருதகாசி எனது வீட்டில் உயிரோடிருக்கிறார்! வைரமுத்து உருக்கம்
சென்னை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் தடம்பதிப்பதற்கு முன்பே திரைப்பாட்டில் இடம்பிடித்தவர் மருதகாசி என்றும் நூற்றுக்கணக்கான பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்றும் கவிஞர் வைரமுத்து, புகழாரம் சூட்டியுள்ளார்.
"விவசாய புலவர்" மருதகாசியின் நினைவு நாளான நவ.29ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் புலவர் குறித்து, கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
கண்ணதாசனும்
தடம்பதிப்பதற்கு முன்பே
திரைப்பாட்டில் இடம்பிடித்தவர்
மருதகாசி
அந்த வேளாண் குடும்பத்து
விவசாயப் புலவனின்
நினைவு நாள் இன்று
'அலிபாபாவும் 40 திருடர்களும்'
அனைத்துப் பாடல்களும் அவர்தான்
உத்தமபுத்திரனில்
'முல்லை மலர்மேலே
மொய்க்கும் வண்டுபோலே'
மந்திரி குமாரியில்
'வாராய் நீ வாராய்'
தாய்க்குப்பின் தாரத்தில்
'மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா'
மன்னாதி மன்னனில்
'ஆடாத மனமும் உண்டோ'
கைதி கண்ணாயிரத்தில்
'கொஞ்சிக் கொஞ்சிப்பேசி
மதி மயக்கும்'
கொடுத்து வைத்தவளில்
'நான் யார் தெரியுமா?'
மக்களைப் பெற்ற மகராசியில்
'ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா?'
நினைத்ததை முடிப்பவனில்
'கண்ணை நம்பாதே'
இப்படி நூற்றுக்கணக்கான
வெற்றிப் பாடல்கள்
மருதநிலக் கவிஞர்
மருதகாசி படைத்தவை
நிலத்தில் விளைந்து
சாய்ந்திருக்கும்
நெற்கதிர்களைப் பார்த்து
'வளர்ந்துவிட்ட பருவப்பெண்போல்
உனக்கு வெட்கமா - தலை
வளஞ்சு சும்மா பாக்குறியே
தரையின் பக்கமா -இது
வளர்த்துவிட்ட தாய்க்குத்தரும்
ஆசை முத்தமா"
என்று வேளாண்மொழியில்
தற்குறிப்பேற்ற அணி எழுதியவர்
வாழும் காலத்திலேயே
அவர் சாதனைகள்
உரத்த குரல் இல்லாமல்
உலர்ந்து போனதால்
அதிவிரைவில் அவர்
மறக்கப்பட்டுவிட்டார்
நினைவூட்டுவதற்கு
இரண்டு வேண்டும்
இறந்தவன் பெருமை உணர்ந்த
குடும்பம் வேண்டும்
அல்லது
நிலைத்த ஒரு நிறுவனம் வேண்டும்
குடும்பம் என்றால்
படத்திற்கு 5பேர் பூப்போடுவார்கள்
நிறுவனம் என்றால்
50பேர் கைதட்டுவார்கள்
இந்த இரண்டும் இல்லாதவர்கள்
ஓராண்டு நினைவு திரும்புமுன்னே
நூறாண்டு மறக்கப்படுகிறார்கள்
எத்துணை பெரிய
கொம்பனுக்கும் இதுவேநேரும்
நன்றியுள்ள சமூகத்தில்தான்
கலைஞன் உயிரோடு இருக்கிறான்
மருதகாசி
எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்
இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
— வைரமுத்து (@Vairamuthu) November 29, 2025
கண்ணதாசனும்
தடம்பதிப்பதற்கு முன்பே
திரைப்பாட்டில் இடம்பிடித்தவர்
மருதகாசி
அந்த வேளாண் குடும்பத்து
விவசாயப் புலவனின்
நினைவு நாள் இன்று
‘அலிபாபாவும் 40 திருடர்களும்’
அனைத்துப் பாடல்களும் அவர்தான்
உத்தமபுத்திரனில்
‘முல்லை மலர்மேலே
மொய்க்கும்… pic.twitter.com/yvEjTsHYCA
யார் இவர்?
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதகாசி. இவர் 1920-ஆம் ஆண்டு பிறந்தார். தனது 29 ஆவது வயது முதல் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
என்னென்ன பாடல்கள்
இவர் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி" என்ற நாடகத்திற்கு பாடல் எழுதினார். மந்திரிகுமாரி திரைப்படத்தில் மருதகாசி எழுதிய "வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே..", மங்கையர் திலகம் படத்தில் "நீல வண்ணக் கண்ணா வாடா", உள்ளிட்ட பாடல்கள் மருதகாசியை பிரபலமாக்கியது.
இறப்பு
தாய்க்குப் பின் தாரம் படத்திற்காக எம்ஜிஆருக்கு "மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா.. " என்ற பாடலை எழுதியிருந்தார். எண்ணற்ற பாடல்களால் ரசிகர்களை கட்டி போட்ட மருதகாசி, தனது 69 ஆவது வயதில், அதாவது 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி காலமானார். அவரது இறப்புக்கு பிறகு மருதகாசியின் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு அரசுடைமையாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications