முள் மரம் முளைவிடும்போதே "கிள்ளப்பட வேண்டும்.." கவிஞர் வைரமுத்து பரபர ட்வீட்
சென்னை: முள்மரம் முளைவிடும் போதே கிள்ளப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு விழாவில் பேசிய திமுக எம்பி ஆ ராசா மனுஸ்மிருதி குறித்து பேசியிருந்தார். அதுகுறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை பல அரசியல் தலைவர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்திற்காக ஆ ராசாவின் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறிக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன.
அது போல் ஆ ராசாவை கைது செய்யக் கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இது போன்று போராட்டங்கள் நடந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பினின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை ரெய்டு நடத்தியது.

அது போல் 11 மாநிலங்களில் 105 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் நாங்கள் என்ன தீவிரவாதிகளா என கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர். இந்த நிலையில் கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கோவையில் ஒப்பணக்கார தெருவில் பாஜக , இந்து முன்னணியினருக்கு சொந்தமாக உள்ள துணிக் கடை, வெல்டிங் கடைகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது போல் தேனி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டன.

இதையடுத்து கோவை, பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக பிஎஃப் அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என அதிமுக, பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஜாதிய ரீதியலிலான பாகுபாடுகளை சில அமைச்சர்கள் பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது போன்ற சம்பவங்களால் அண்மைக்காலமாக தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் முள் மரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற தொனியில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சீராகச் செல்லும்
தமிழ்நாட்டரசின் பயணத்துக்கு
ஊறுசெய்யும் யாரையும்
சட்டமோ சமூகமோ மன்னிக்காது
புகை அடங்குமுன்
பகை அடக்க வேண்டும்
"முள்மரம் முளைவிடும்போதே
கிள்ளப்பட வேண்டும்"
என்றார் வள்ளுவர்
காவல் துறையோர்
வள்ளுவர் வழியில் செல்லுவர்
இவ்வாறு தனது ட்விட்டரில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications