Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து.. தனது படைப்புகளில் கையொப்பமிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

Vairamuthu signs autographs in his books at Chennai Book fair

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த இந்தப் புத்தகக் கண்காட்சி, கொரோனா 3 அலை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது,

ஓமிக்ரான் பாதிப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப். 16ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி, வரும் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஆர்வமுடன், புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.

இதனிடையே இன்று புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

Vairamuthu signs autographs in his books at Chennai Book fair

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான வைகறை மேகங்கள் 1972இல் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது..

வைரமுத்து இதுவரை 38 புத்தகங்கள் எழுதி உள்ள நிலையில், அதில் 17 புத்தகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சிணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே வைரமுத்து இலக்கியம் 50ஐ வாசகர்களோடு கொண்டும் வகையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்த கவிஞர் வைரமுத்து, வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் உற்சாகத்துடன் கையொப்பமிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+