சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து.. தனது படைப்புகளில் கையொப்பமிட்டார்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த இந்தப் புத்தகக் கண்காட்சி, கொரோனா 3 அலை காரணமாகத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது,
ஓமிக்ரான் பாதிப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப். 16ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி, வரும் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஆர்வமுடன், புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.
இதனிடையே இன்று புத்தகக் கண்காட்சியில் கவிஞர் வைரமுத்து, தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையொப்பமிட்டு வழங்கினார்.

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான வைகறை மேகங்கள் 1972இல் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது..
வைரமுத்து இதுவரை 38 புத்தகங்கள் எழுதி உள்ள நிலையில், அதில் 17 புத்தகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சிணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே வைரமுத்து இலக்கியம் 50ஐ வாசகர்களோடு கொண்டும் வகையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்த கவிஞர் வைரமுத்து, வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் உற்சாகத்துடன் கையொப்பமிட்டார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications