"வள்ளுவர் மறை வைரமுத்து உரை"! ஜூலை 13 இல் வெளியாகிறது! பிறவி பயனை அடைந்ததாக பூரித்த கவிப்பேரரசு!
சென்னை: திருக்குறளில் உள்ள அறத்து பால், பொருட் பால், இன்பத்து பால் ஆகியவற்றிற்கு கவிப்பேரரசு வைரமுத்து உரை எழுதியுள்ள நிலையில் அது ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நூலின் பெயர் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" என்பதாகும்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை'
அச்சுப்பணி நிறைந்துவிட்டது
எனது நாற்பதாம் நூல் இது
இதன்
முன்னுரையை நான்
முனைந்து எழுதியிருக்கிறேன்
13 பக்கங்களில் இயங்குகிறது
எனது நீண்ட முன்னுரை
வள்ளுவர்
காற்றைப்போல் பொதுவானவர்
காற்றில் யாரும்
சாயமடிக்க முடியாது;
எந்தப் பழைமை வாதமும்
காற்றைப் பூட்டிவைக்க இயலாது
மறைக்க முடியாத சான்றுகளும்
மறுக்க முடியாத தரவுகளும்
மொய்த்துக் கிடக்கின்றன
முன்னுரையில்
வள்ளுவம்
உலகப் பொதுமறை என்று
உலகத் தமிழர்கள்
உரக்கச் சொல்வதற்கு
எனது முன்னுரையே
வாளுமாகும்; கேடயமுமாகும்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருக்குறள் தமிழின் பெருமைமிகு இலக்கியம். இது அறம், பொருள், இன்பம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு நெறிகளை எளிய முறையில் விளக்கும் இந்த குறள்கள் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பலர் இதை படித்து வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். 1330 குறள்களுக்கும் அவர் மே 22 ஆம் தேதியுடன் உரையை எழுதி முடித்துள்ளார்.
‘வள்ளுவர் மறை
— வைரமுத்து (@Vairamuthu) June 22, 2025
வைரமுத்து உரை’
அச்சுப்பணி நிறைந்துவிட்டது
எனது நாற்பதாம் நூல் இது
இதன்
முன்னுரையை நான்
முனைந்து எழுதியிருக்கிறேன்
13 பக்கங்களில் இயங்குகிறது
எனது நீண்ட முன்னுரை
வள்ளுவர்
காற்றைப்போல் பொதுவானவர்
காற்றில் யாரும்
சாயமடிக்க முடியாது;
எந்தப் பழைமை வாதமும்
காற்றைப்… pic.twitter.com/tyHtN1Vv6n
இந்த நிலையில் அந்த உரைக்கு பெயரையும் அன்றைய தினமே அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரை எழுதி முடித்திருக்கிறேன். இன்று தலைப்பை அறிவிக்கப் போகிறேன்.. தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேயப் பாவணரும், புலவர் குழந்தையும்
மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1333 அருங்குறளுக்கும் உரை எழுதி முடித்த உடன் நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறேன். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டிருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துப் பூக்களை நான் வேண்டி நிற்கிறேன். நீங்கள் என் மீது வீசப்போகும் ஒவ்வொரு பூவும், என் உறுதியை உயர்த்திப் பிடிக்கும். இன்னும் தமிழுக்குச் செய்ய வேண்டும் என்ற வேட்கைக்கு வேகம் கொடுக்கும். வாழ்க திருவள்ளூவர்! வளர்க வள்ளுவம்! வள்ளுவர் மறை, வைரமுத்து உரை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications