வள்ளியின் திருவிளையாடலில் காலியான முருகன்.. டீ மாஸ்டருக்கு ஏன் இந்த வேலை? யாரிந்த பெங்களூர் மந்த்ரா
சென்னை: கள்ளக்காதல் அட்டூழியங்கள் பெருகி வருவதுடன், குடும்ப உறவுகளும் முறிந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என அட்டகாசங்கள் பெருகிவிட்டன.. இதனால் இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் துயரமும் நடந்து வருகிறது.. வடமாநிலங்கள் போலவே தமிழகத்திலும், கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறது.. நேற்று ஒரே நாளில் நடந்த 2 கொலைகள் பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ளது காவக்காரன்பட்டி.. 42 வயது முருகன் என்பவர் டீ மாஸ்டராக உள்ளார்.. மனைவி வள்ளி. 37 வயதாகிறது.. தம்பதி இருவருமே எருமப்பட்டி, கைகாட்டியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தனர்.

டீக்கடை மாஸ்டர்
இதே டீக்கடையில் 25 வயது அருண்குமார் என்பவரும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.. ஒருகட்டத்தில் வள்ளிக்கும் அருண்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்த கணவன் முருகன், மனைவி வள்ளியை பலமுறை கண்டித்துள்ளார்.
கணவர் தன்னை அடிக்கடி கண்டிப்பதால் ஆத்திரமடைந்த வள்ளி, டீ மாஸ்டர் அருண்குமாருடன் சேர்ந்து முருகனை கொலை செய்ய முடிவெடுத்தனர்.. இதற்காக நண்பர் சிவாவின் உதவியை பெற்றனர்.
சம்பவத்தன்று, முருகனை அழைத்து சென்று, அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர்.. போதை தலைக்கேறிய முருகன் மயங்கிவிழும்வரை, அங்கே மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தார் வள்ளி..
வள்ளியின் கள்ளக்காதல்
பிறகு, வள்ளி, அருண்குமார், சிவா மூன்று பேரும் சேர்ந்து, முருகனின் கழுத்தை நெரித்து கொன்றனர்.. இதுதொடர்பான விசாரணையை நடத்தினர். அப்போதுதான் முருகன் மது குடித்து இறக்கவில்லை, அவரது கழுத்து நெறிக்கப்பட்டு நரம்புகள் முறிந்து உயிரிழந்துள்ளதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது..
இதற்கு பிறகுதான் கள்ள ஜோடி சிக்கியது.. கள்ளக்காதலுக்கு முருகன் இடையூறாக இருந்ததால், மது வாங்கி கொடுத்து கழுத்தை நெரித்து கொன்றதை வள்ளியும் அருண்குமாரும், ஒப்புக் கொண்டனர்.. கொலை செய்த 3 பேருமே சிறையில் உள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவரை கொலை செய்த சம்பவம் நேற்றைய தினம் மிகப்பெரிய அதிர்ச்சியை நாமக்கல்லில் ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கள்ளக்காதலுக்கு ஒப்புக்கொள்ளாத ஒரு பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்து, பேரதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
தம்பதிக்குள் விரிசல்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி அருகே உள்ளது திருபாளையா.. இங்கு கூசித்து வரும் தம்பதி மந்திரா மண்டல் - பிஜோன்.. மந்திராவுக்கு 27 வயதாகிறது.. இவர்கள் இருவருமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்..
இந்த தம்பதிக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவருமே, திருபாளையா பகுதியிலேயே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்..
இதே பகுதியில் வசித்து வரும் 29 வயது சுமன் என்பவர் பிஜோனின் நண்பராவார்.. பிஜோனும், சுமனும் சேர்ந்து அந்தமானுக்கு வேலைக்கு சென்றிருந்தனர்... இதில், சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருந்தார்.
மந்த்ரா வீட்டில் என்னாச்சு
கடந்த 5-ந்தேதி இரவு மந்திரா வீட்டுக்கு சென்ற சுமன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.. அத்துடன், மந்த்ராவின் வீட்டில் இன்னொரு ரூமுக்கு சென்ற சுமனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. .
இந்த 2 மரணங்கள் குறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளது.. அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்த மந்திரா, சுமனிடம் பேசி பழகி வந்துள்ளார்.
கண்டிப்பாக கள்ளக்காதல் இல்லை
கடந்த 5-ந் தேதி இரவு மந்திரா வீட்டிற்குள் சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கலாம் என்றும், இதற்கு மந்திரா சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்திருக்கலாம், பிறகு போலீசுக்கு பயந்து சுமன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், சுமன், மந்த்ரா இருவருக்குமே கள்ளத்தொடர்பு இல்லை என்று ஹெப்பகோடி போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.. எனவே, இந்த கொலை எப்படி நடந்தது? சுமன் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications