Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடத்திற்கு முன் டிக்கெட் புக் செய்வது எப்படி? எந்தெந்த ரூட்களில் அனுமதி! லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் (Vande Bharat train) கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது எந்தெந்த வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், எப்படி செய்வது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், பலரும் இந்த ரயில்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். தமிழகத்திலும் சென்னை - நாகர்கோவில், சென்னை - நெல்லை, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

vande-bharat-ticket-booking-15-mins-before-departure-eligible-routes-full-details

ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்

தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது, அவசர பயணங்கள் அல்லது திட்டமிடப்படாத தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்காக பயணிகள் முன்பதிவு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காலியான இருக்கைகள் நிகழ் நேரத்தில் தெரியும். பயணிகள் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு முன் வரை முன்பதிவு செய்யலாம். அதாவது கரண்ட் புக்கிங் ஆப்ஷனை பயன்படுத்தி இந்த ரயில்களில் கடைசி 15 நிமிடம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக, ரயில் புறப்பட்டதும் இடைப்பட்ட நிலையங்களிலிருந்து முன்பதிவு செய்ய முடியாது. இதனால் டிக்கெட்டுகள் காலியாக இருந்தும் பயணிகளுக்கு புக் செய்ய முடியாத நிலை இருந்த நிலையில், இந்த வசதி மூலம் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

8 வந்தே பாரத் ரயில்கள் என்னென்ன?

தற்போது, தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் செயல்படுகின்றன. கடைசி நிமிட முன்பதிவு வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

* வண்டி எண் - 20631 மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20627 சென்னை எழும்பூர் - நாகர்கோவில், 20628 நாகர்கோவில் - சென்னை எழும்பூர்,
* வண்டி எண் - 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு கான்ட்.,
* வண்டி எண் -20646 மங்களூர் சென்ட்ரல் - மடகாவ்,
* வண்டி எண் - 20671 மதுரை - பெங்களூர் கான்ட்.,
* வண்டி எண் - 20677 டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - விஜயவாடா. இந்த ரயில்கள் தெற்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+