வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடத்திற்கு முன் டிக்கெட் புக் செய்வது எப்படி? எந்தெந்த ரூட்களில் அனுமதி! லிஸ்ட்
சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் (Vande Bharat train) கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது எந்தெந்த வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், எப்படி செய்வது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், பலரும் இந்த ரயில்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். தமிழகத்திலும் சென்னை - நாகர்கோவில், சென்னை - நெல்லை, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்
தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பயணிகள் தாங்கள் புறப்படும் நிலையத்திலிருந்து ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது, அவசர பயணங்கள் அல்லது திட்டமிடப்படாத தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்காக பயணிகள் முன்பதிவு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காலியான இருக்கைகள் நிகழ் நேரத்தில் தெரியும். பயணிகள் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு முன் வரை முன்பதிவு செய்யலாம். அதாவது கரண்ட் புக்கிங் ஆப்ஷனை பயன்படுத்தி இந்த ரயில்களில் கடைசி 15 நிமிடம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக, ரயில் புறப்பட்டதும் இடைப்பட்ட நிலையங்களிலிருந்து முன்பதிவு செய்ய முடியாது. இதனால் டிக்கெட்டுகள் காலியாக இருந்தும் பயணிகளுக்கு புக் செய்ய முடியாத நிலை இருந்த நிலையில், இந்த வசதி மூலம் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
8 வந்தே பாரத் ரயில்கள் என்னென்ன?
தற்போது, தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் செயல்படுகின்றன. கடைசி நிமிட முன்பதிவு வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
* வண்டி எண் - 20631 மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல்,
* வண்டி எண் - 20627 சென்னை எழும்பூர் - நாகர்கோவில், 20628 நாகர்கோவில் - சென்னை எழும்பூர்,
* வண்டி எண் - 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு கான்ட்.,
* வண்டி எண் -20646 மங்களூர் சென்ட்ரல் - மடகாவ்,
* வண்டி எண் - 20671 மதுரை - பெங்களூர் கான்ட்.,
* வண்டி எண் - 20677 டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - விஜயவாடா. இந்த ரயில்கள் தெற்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications