"அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவே பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள்" அண்ணாமலைக்கு திருமாவளவன் அட்வைஸ்!
சென்னை: அரசியல்வாதிகளை கேள்வி கேட்பதற்காக தான் பத்திரிகையாளர்கள் இருக்கிறார் என்று அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுரை கூறியுள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ தமிழக பாஜக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கோபமடைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் அமைச்சரையும், பத்திரிகையாளர்களையும் திட்டினார்.

அண்ணாமலை பேசியது என்ன?
பத்திரிகையாளர்களின் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க என்று செய்தியாளர்களையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

திமுக கண்டனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சிற்கு திமுக, கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சு அநாகரீகமானது என்றும், தனது செயலுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இனியாவது நாகரிகமும், பண்பாடும் காத்திட வேண்டும் என்று திமுகவின் டிகேஏஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஊடகவியலாளர்களை காயப்படுத்தும் வகையில் பேசி இருப்பது வேதனை அளிக்கிறது. அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு அறிவுரை
ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி கேட்க தான் இருக்கிறார்கள். ஆத்திரமூட்டும் கேள்விகளையும் கேட்பார்கள். அதற்காக ஊடகவியலாளர்களை காயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அதனால் ஊடகவியலாளர்களின் உணர்வுகளை மதித்து வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications