வழக்கறிஞர் அப்பாஸுக்கு ஜாமீன்..பாஜகவின் கூலிப்படை என்ஐஏ! எதிரிகளை வேட்டையாடுது - வன்னியரசு காட்டம்
சென்னை: யுஏபிஏ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முகமது அப்பாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ள நிலையில், பாஜகவை எதிர்ப்பவர்களை என்.ஐ.ஏ. வேட்டையாடி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "NIA அமைப்பால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் முகமது அப்பாசுக்கு பிணை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எதிராக என்.ஐ.ஏ. பதிவு செய்த வழக்கில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் தோழர் முகமது அப்பாஸ் அவர்களுக்கு பிணை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இன்று உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்கள் 13 பேர் மற்றும் அடையாளம் தெரியாத மற்றவர்களுக்கு எதிராக செப். 19 ஆம் தேதி வழக்கு (RC-42/2022/NIA/DLI) ஒன்றை பதிவு செய்தது என்.ஐ.ஏ. இது போல நாடெங்கும் அந்தந்த மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த பின்னணியில் 2022 செப். 28ஆம் தேதி PFI அமைப்பை தடை செய்தது மோடி அரசு. தங்கள் அமைப்பை கலைப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பும் அதே நாளில் அறிவித்தது. தமிழ்நாடு கூட்டு சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் டிசம்பர் 2022 வரை 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை 2023 மார்ச் 17ஆம் தேதி தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.
இந்த நிலையில் தான் மே 5 ஆம் தேதி மதுரை வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசப் உள்ளிட்ட மேலும் 5 பேரை இந்த வழக்கில் இணைத்து கைது செய்தது என்.ஐ.ஏ. எந்த வழக்குக்காக கைதான பாப்புலர் ஃப்ரண்ட் தோழர்களுக்கு முகமது யூசப் வாதாடினாரோ அதே வழக்கில் அவரையும் இணைத்து கைது செய்தது என்.ஐ.ஏ.

இந்த வழக்கில் தான் இன்று உச்சநீதிமன்றம் பிணையை உறுதி செய்துள்ளது. அரசியல் ரீதியாக பாஜகவின் செயல் திட்டங்களை எதிர்க்கும் சனநாயக அமைப்புகளை வேட்டையாடுவதையே தமது பணியாக கொண்டுள்ளது என்.ஐ.ஏ. அமைப்பு. பீமா கோரேகான் வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு தலித்கள் உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை UAPA சட்டத்தில் கைது செய்தது NIA.
இதுவரை அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை என்பது தான் NIA அமைப்பின் சாதனை. PFI அமைப்பு தடை செய்யப்பட்டது கூட அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையே/சனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய NIA போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகள் பாஜகவின் கூலிப்படையாக செயல்படுவது தான்
சனநாயகத்தின் சோகம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications