ரூ.1000 கோடி விஞ்ஞான ஊழல்.. அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்.. வீரலட்சுமி பகீர் புகார்!
சென்னை: சென்னை பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதில் உடந்தை என்றும் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பகீர் குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், "பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்.ஜி.பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையிடம் இரண்டு முறை புகார் அளித்தோம். ஆனால் 2 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பார்த்தால் இந்த விஷயத்தில் அவர்களுக்கு பக்க பலமாக அண்ணாமலை இருக்கிறார். மாலினி ஜெயச்சந்திரன், எம்.ஜி.பாஸ்கர் ஆகியோர் டம்மி பீஸ். அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதே அண்ணாமலை தான். இந்தப் பணத்தில் வரும் பங்கு அவருக்கும் செல்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மூன்றாவது முறையாக புகார் அளிக்க உள்ளோம். வரும் 26ஆம் தேதி அண்ணாமலை மீது வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம்.
இதில் ஏன் அண்ணாமலை பெயரையும் சேர்க்கிறோம் என்றால், சென்னை பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் சேர்ந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார். அதனை தமிழர் முன்னேற்றப்படை முறியடிக்கும். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்காக ஆவணங்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம்.
முறைகேடுகளில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் எம்.ஜி.பாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்போம்" என வீரலட்சுமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் இதில் அண்ணாமலையும் ஈடுபட்டுள்ளார் என்றும் வீரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி கடந்த சில வாரங்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளிக்க வீரலட்சுமி உதவி வந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமியிடம் இருந்து பிரிந்து பெங்களூர் சென்றார். ஆனாலும், விடாமல் சீமானுடன் கருத்து மோதல் நடத்தி வந்த வீரலட்சுமி, இப்போது அண்ணாமலையை டார்கெட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications