மக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்திய வீதி விருதுகள் திருவிழா!
Recommended Video
சென்னை:" லயோலா கல்லூரியின் மாற்று ஊடக மையம் வருடம்தோறும் நிகழ்த்தும் வீதி விருதுகள் திருவிழா, சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்தது.
மக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடக்கும் இந்த விழா தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்திருக்கிறது.

இந்த விழாவில் தமிழகத்தின் 37 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.. இவர்களின் கார்னிவல் வகையறா வீதி ஊர்வலம், வள்ளுவர் கோட்டம் தொடங்கி லயோலா கல்லூரி வரை நடந்தது.
விழா அரங்கில் மாணவிகளில் சாகச நிகழ்ச்சிகளும், மாணவர்களின் சாகச நிகழ்ச்கிளும் நடந்தது. பானை மீது ஏறி நடனமாடி பெண்கள் குழு அசரடித்தது. தப்பாட்டம், தலையில் கரகம் வைத்து சாகச நடனமும் கலைஞர்கள் ஆடினர். தலையில் முண்டாசு காட்டியபடி கலாச்சார உடையில் பலர் காணப்பட்டனர்.
இந்த விழாவில் எழுத்தாளர்கள் பாலு மணிவண்ணனின் 'வெத்தல', மயிலை பாலுவின் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களின் வெளியீடு. கடந்த ஆண்டில் வெளியான 'அசுரன், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', ஒத்த செருப்பு' உள்ளிட்ட திரைப்படங்கள் மீதான உரையாடல்களும் இடம் பெற்றன. தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பல கலைஞர்களுக்கு வீதி விருது வழங்கி கௌரவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications