செவிலியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது! இது சரியல்ல! அரசுக்கு அறிவுறுத்தும் வேல்முருகன்!
சென்னை: செவிலியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நான்காவது அலை சீனா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமடைந்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தியாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4-வது அலை
கொரோனா நான்காவது அலை ஏற்பட்டாலும் , அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தனது மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும், செவிலியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கு மாறாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை, மருத்துவர்களை, செவிலியர்களைப் பணி நீக்கம் செய்வது சரியல்ல.

500 செவிலியர்கள்
முக்கியமாக, கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் 3 ஆயிரம் பேரில், 2,500 பேருக்கு நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மீதமுள்ள 500 செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதோடு, செவிலியர்கள் மத்தியில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயம்
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இந்த செவிலியர்கள் தங்கள் உயிரையும் துச்சமென கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவையாற்றினர். எனவே, 500 செவிலியர்களின் பணி சேவையை மதித்து, தற்போது பணிபுரிந்து வரும் பணியில் தொடர்ந்து சேவையாற்ற, மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்செவிலியர்களையும் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணி மாற்றம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications