வேல்முருகனுக்கு ஆவேசம்..அதெப்படி ஸ்டாலினை சொல்லலாம்? ஆளுநர் மாளிகை கிளம்புகிறார்..கொதிக்கும் காவிரி
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று செப்டம்பர் 30-ம் தேதி "காவிரி எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் போராட்டம் வெடித்து வருகிறது.. அதேபோல, தமிழகத்திலும் விவசாய அமைப்புகள் முதல்அரசியல் கட்சிகள் வரை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
வேல்முருகன்: இன்றுகூட நாம் தமிழர் கட்சியானது, தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது.. அந்தவகையில், வாழ்வுரிமை கட்சியும் இன்றைய தினமே அதாவது செப்டம்பர் 30ம் தேதியே, தன்னுடைய போராட்டத்தையும் அறிவித்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் 2 நாட்களுக்கு முன்பே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் வாய்மூடி மௌனம் காக்கிறது.
இளிச்சவாயர்கள்: காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தரவேண்டிய காவிரி பங்கு நீரை, மோடி அரசும் பெற்றுத்தர முடியவில்லை; இனிமே பெற்று தர போவதில்லை. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி; கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி. அவர்களை பொறுத்தவரை, தமிழர்கள் ஏமாளிகள்; இளிச்சவாயர்கள் என்பதே மன ஓட்டம்.
முதல்வர் ஸ்டாலின்: எனவே, காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை முன்னெடுப்பதோடு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளது என்று அறிவித்திருந்தார்.
வேல்முருகனின் கட்சி இன்று நடத்தப்போகும் முற்றுகையானது, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications