தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை இல்லை... போராட்டத்தில் குதித்த வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன், தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்தார்.
தமிழகத்தில் இந்திக்காரர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் மண்ணின் மைந்தர்களான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

வேல்முருகன் போராட்டம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலஅரசு மற்று மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டன.

வேல்முருகன் பேச்சு
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்ற வேல்முருகன், பாங்க் ஆஃப் இந்தியா தமிழக கிளைக்களுக்காக தேர்வு செய்யப்பட்ட எட்டாயிரம் பேர்களில் ஏழாயிரம் பேர் வட இந்தியர்கள் என்றும் இப்படியிருந்தால் வங்கிகளுக்கு செல்லும் படிப்பறிவில்லாத மக்கள் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். இது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் நிகழ்வு என குற்றஞ்சாட்டினார்.

கண்டுகொள்ளவில்லை
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வட இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு ஏற்கனவே தாம் கொண்டு சென்றுவிட்டதாகவும், ஆனால் அவர் எதைப்பற்றியும் கண்டுகொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

நெய்வேலி சுரங்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே பணியிடங்கள் உட்பட எங்கு பார்த்தாலும் வட மாநிலத்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாகவும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications