வெங்காரம் சாப்பிட்டு மதுரை மாணவி பலி.. Miss Guide செய்த கிளினிக்கிற்கே கால் செய்த "ஒன்இந்தியாதமிழ்"
சென்னை: உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெங்காரம் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு மற்றும் ரத்த வாந்தி எடுத்து மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியின் உயிர் பறிபோக காரணமான யூடியூப் சேனலுக்கு ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
மதுரையைச் சேர்ந்த செல்லூர் மீனாம்பாள் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் - விஜயலட்சுமி தம்பதியின் மகளான கலையரசி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் அதனை குறைக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்த கலையரசி, "இணைவோம் இயற்கையுடன்" என்ற யூடியூப் சேனலில் உடல் எடையை குறைப்பது தொடர்பான வீடியோவை பார்த்துள்ளார்.

அதில் கூறியபடி வெங்காரத்தை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மருத்துவ ஆலோசனை எதுவும் பெறாமல் கண்மூடித்தனமாக யூடியூப்பை நம்பியதால் கல்லூரி மாணவியின் உயிர் பரிதாபமாக போயுள்ளது.
கல்லூரி மாணவியின் உயிர் பறிபோக காரணமான யூடியூப் சேனலுக்கு ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அந்த சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலைச் சேர்ந்தவர் கொஞ்சமும் பொறுப்பு இன்றி பேசினார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் கால் செய்த வீடியோவை இதில் பாருங்கள்..












Click it and Unblock the Notifications