வதந்தி பரப்பாதீங்க ப்ளீஸ்.. நல்லகண்ணு உடல்நலம் குறித்து பரவும் வதந்தி! அவசர அவசரமாக வெளியான வீடியோ!
சென்னை: மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லகண்ணு உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. அவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிதீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல்களை நம்ப வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 101 வயதை கடந்த அவர் கடந்த சில வாரங்களாக வயதுசார்ந்த உடல்நல பிரச்சனைகளால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சிறப்பு மருத்துவர் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி அவரது உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வேகமாக பரவத் தொடங்கின.

நல்லகண்ணு உடல்நிலை
குறிப்பாக அவர் உயிரிழந்ததாக கூறிய பதிவுகள் பரவியதால் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த தகவல்கள் உண்மையல்ல என்று கட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் வெளியிட்ட வீடியோவில், நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் அவர் இன்னும் ஆபத்து நிலையை முழுமையாக தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக நீதி, விவசாயிகள் உரிமை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக நீண்ட காலம் போராடியவர் நல்லகண்ணு. எளிமையான வாழ்க்கை முறையாலும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்த அரசியல் தலைவராகவும் அவர் அறியப்படுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அவரது உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துவருகின்றனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்துகளும் பல தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தவறான தகவல்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர வேண்டாம் என்று கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ மருத்துவ அறிவிப்புகள் மற்றும் கட்சி வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உடல்நலம் வதந்தி
நல்லகண்ணு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதே தற்போதைய நிலை என்று கட்சி தெளிவாக அறிவித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தற்போது அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கும் நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை தொடர்பாக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications