Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் அலட்சியத்தால் திருச்செந்துார் கோயிலுக்கு ஆபத்து.. விஸ்வ ஹிந்து பரிஷத் அடுக்கும் காரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன . திருச்செந்துார் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது . சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில கி மீ துாரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவு காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு கோயில் அருகே கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார்

திருச்செந்தூர் கடலில் கட்டப்பட்டிருக்கும் தூண்டில் வளைவுப் பாலம் அண்மைகாலங்களில் மிக முக்கியமான மற்றும் பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது. அதன் பயன்பாடு, சுற்றுச்சூழல் தாக்கம், மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகிய மூன்று காரணங்கள்தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.

VHP complains that the Tiruchendur temple is in danger due to the negligence of the TN government

சுற்றுச்சூழலியல் மற்றும் புவியியல் தாக்கம்

திருச்செந்தூர் கடலில் உள்ள தூண்டில் வளைவு கடலில் நீரோட்டத்தைத் தடுக்கிறது என்றும் அதன் திசையை மாற்றுகிறது என்றும் இதனால், தூண்டில் வளைவின் ஒரு பகுதியில் மண் குவிந்து (Accretion) கடற்கரை விரிவடைகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் மறுபகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்படுகிறது என்றும் இது கடலோர நிலப்பரப்பை நிரந்தரமாக மாற்றுகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்ததூண்டில் வளைவு அமைப்பு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலை நேரடியாகப் பாதிக்கிறது என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆன்மீக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள நாழிக் கிணறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது கடல் நடுவில் உள்ளபோதும், அதன் நீர் உப்பாக இல்லாமல், நன்னீராக இருப்பது ஒரு அதிசயம் ஆகும். ஆனால் தூண்டில் வளைவு கட்டப்பட்ட பிறகு, நாழிக் கிணற்றின் நீரின் தன்மை மாறிவிட்டதாகவும், கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டதாகவும் பக்தர்கள் மற்றும் பாரம்பரியவாதிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தூண்டில் வளைவு அந்தப் புனிதமான கட்டமைப்பைச் சீர்குலைப்பதாக ஆன்மீக பக்தர்கள் பார்க்கிறார்கள்.

ஏன் பாலம் கட்டப்பட்டது

இந்தத் தூண்டில் வளைவு, கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தவும், துறைமுகம் அல்லது படகுகளை நிறுத்துவதற்கான வசதியை மேம்படுத்தவும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பாலம் மிக நீண்டதாகவும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதில் தெளிவு இல்லை என்றும், இது யாருடைய தனிப்பட்ட தேவைக்காக அல்லது வர்த்தக நோக்கம் கொண்டதா என்றும் கேள்விகள் பலர் எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்கு முன்பு, போதிய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை மீனவர்கள் முன் வைத்து வருகிறார்கள்.

விஷ்வ இந்து பரிஷத் புகார்

இந்நிலையில் மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன . திருச்செந்துார் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில கி மீ துாரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவு காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு கோயில் அருகே கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது

வளைவை மாற்றி அமைக்க வேண்டும்

இந்நிலை நீடித்தால் கோயிலுக்கு பாதுகாப்பில்லை. பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராட முடியாத நிலை ஏற்படும் . எனவே தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவை மாற்றி அமைக்க வேண்டும். கோயிலை காப்பாற்றிடவும், பாதுகாக்கவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துாண்டில் வளைவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தவறினால் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் " இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+