"கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி".. சூடா சுவையா.. என்னய்யா இது.. இப்படி கிளம்பிட்டீங்க!
சென்னை: கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என ஒருவர் கூவி கூவி விற்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகர், நடிகைகள் பெயரை வைத்தால் பொருட்களோ, வியாபாரமோ களைகட்டும் என்பது நம்பிக்கை. எடுத்துக்காட்டு நதியா கம்மல், நதியா கொண்டை, சந்திரமுகி புடவை, குஷ்பு இட்லி என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

வியாபாரம்
அந்த வகையில் நோய் பெயரில் இதுவரை எந்த பொருளும் பிரபலமடையவில்லை. ஆனால் இந்த கொரோனா நோய் வந்தாலும் வந்தது, கொரோனா தோசை, மாஸ்க் பரோட்டா என ஹோட்டல் ஊழியர்கள் சிறப்பாக வியாபாரம் செய்து வருகிறார்கள்.

கொரோனா விழிப்புணர்வு
இது கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டது என ஹோட்டல் ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என ஒருவர் கூவி கூவி விற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அண்டாவில் பிரியாணி
அந்த வீடியோவில் ஒருவர் ஒரு அண்டாவில் பிரியாணி வைத்திருக்கிறார். கொரோனா பிரியாணி கொரோனா பிரியாணி என்கிறார். அப்போது ஒருவர் வந்து எங்க கொரோனாவை காணவில்லை என ஏதோ லெக்பீஸ் காணவில்லை என்பது போல் கேட்கிறார்.

நெட்டிசன்கள்
அதற்கு அந்த கடைக்காரரோ கொரோனா எப்படி கண்ணுக்கு தெரியும் என கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த கடை எங்கே இருக்கிறது என தெரியவில்லை. கொரோனாவால் பலர் இறந்து கொண்டு வரும் நிலையில் வியாபார சுயலாபத்திற்காக இப்படி அதன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார் என நெட்டிசன்கள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications