விஜய் - சங்கீதா விவாகரத்து.. யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம்.. சிடிஆர் நிர்மல்குமார் வேண்டுகோள்!
சென்னை: தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அண்மையில் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 1999ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இடையில் திருமணம் நடைபெற்றது. விஜய்யின் ரசிகையாக இருந்து அவரை காதலித்து சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர விஜய் மனைவி சங்கீதா முடிவு எடுத்துள்ளார். விவாகரத்து தொடர்பான மனுவில் விஜய் மீது சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் சங்கீதா, நடிகை உடன் கள்ளத்தொடர்பில் விஜய் இருந்தது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது.
நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் விஜய் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். இதையடுத்து நடிகை உடனான கள்ளத்தொடர்பை முறித்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னதை போல் விஜய் நடக்காமல், கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு, விஜய்யால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.
இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் கள்ளத்தொடரை விஜய் தொடர்ந்தார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதனால் குழந்தைகளும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், எனக்கான உரிமைகளை கணவர் விஜய் நிறுத்திவிட்டார். சுதந்திரமாக நடமாடவிடாமல் தடுத்தார். பொருளாதார ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக தவெக தரப்பிலோ, நடிகை தரப்பிலோ அல்லது விஜய் தரப்பிலோ எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக தலைவர் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
-
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
விவாகரத்து இருக்கட்டும்.. தேர்தல் வேலையில் விஜய் தீவிரம்.. மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்! -
நாளை "ஜனநாயகன்" மறு தணிக்கை.. முடிவுக்கு வரும் விஜய் பட பஞ்சாயத்து.. அப்போ இந்த மாதமே ரிலீஸா? -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம் -
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா? அதான் விவாகரத்தா? ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக் -
”என்டிஏ கூட்டணிக்கு போனால் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிடும்” விஜய்க்கு அமீர் எச்சரிக்கை! -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா












Click it and Unblock the Notifications