தமிழகத்தில் குதிரை பேரம்! என்னுடைய எம்எல்ஏவை காணவில்லை! ஆளுநரை சந்தித்து புகாரளித்த டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். என்னுடைய மன்னார்குடி வேட்பாளர் காமராஜை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் டிடிவி தினகரன்.

Vijay is Desperate for Power TTV Dhinakaran Alleges Horse-Trading Says MLA Missing

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது:- இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவரது ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக எனது எம்.எல்.ஏ காமராஜை நாங்க பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது தொடர்புகொள்ள முடியவில்லை.

முதலில் போன் போட்ட போது அவர் எடுக்கவில்லை. எனவே செல்போனை பிடுங்கி வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. எனவே குதிரை பேரமா என்று தெரியவில்லை. விஜய் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆதரவு கொடுக்கவில்லை. அவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக எம்.எல்.ஏ மன்னார்குடியில் திமுகவையும், தவெகவையும் எதிர்த்து தான் வெற்றி பெற்று இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது விஜய் தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்க முடியும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே தான் நான் ஆளுநர் ஆர்லேகரை பார்த்து இது குறித்து புகார் கூறியிருக்கிறேன். இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் இப்படியா.. பிறகு எப்படி தூய சக்தி ஆக முடியும்.. என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+