Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரசாரத்தில் கொட்டி தீர்த்த விஜய்.. மனைவி சங்கீதா விவகாரத்து கோரியது பற்றி முதல் முறையாக பேச்சு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் பேசிய விஜய், மனைவி சங்கீதா தன்னிடம் இருந்து விவாகரத்து கோரியது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இது பற்றி மவுனம் கலைத்துள்ளார். ஆனால் தனது மனைவி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமவே, விவகாரத்து விவகாரம் குறித்து விஜய் பேசியுள்ளார்.

நெல்லையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் பேசியதாவது:- கரூர் சம்பவத்தை பற்றி ஊருக்கே தெரியும். ஆனால் போடு விஜய் மீது பழிய போடு.. என்னடா இவ்ளோ பெரிய ஒரு பழியை தூக்கி விஜய் மேல போட்டாலும் மக்கள் விஜய் கூடவே நிற்கிறாங்க.. இது என்ன அதிசயமாக இருக்குது.. அப்டின்னு அதை டிரை பண்ணி பார்த்தாங்க.. அது மக்கள் கிட்ட எடுபடல..

Vijay Opens Up During Campaign Speaks for the First Time About Wife Sangeetha Seeking Divorce

தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னாடி

அடுத்து ஜனநாயகன முடக்கு.. படத்தை முடக்கினால் பையன் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிருவான்னு நினைச்சாங்க.. அது யாரு முடக்குனாங்கன்னு உங்களுக்கு தெரியும். நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படத்தை முடக்குனாலும் அவனும் அதை கண்டுக்காம அவன் வேலையை பார்த்துட்டு போயிட்டு இருக்கான்.. அடுத்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சி.. போடு எஸ்.ஓ.பின்னு ஒன்னு போடு..

விஜய்க்கு மட்டும் தனியா ரூல்ஸ். கண்டிஷன்ஸ்.. மற்ற கட்சிகளை எல்லாம் விடு.. விஜய்க்கு மட்டும் தனி கண்டிஷன்ஸ் போடு.. அவன் வெளியவே வரக்கூடாது. மக்களை சந்திக்கவே கூடாது. என்ன ஆச்சு.. அதுவும் எடுபடல.. அடுத்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சி.. நம்ம சுற்றி இருக்கவங்கள வச்சி.. அதாவது இத்தனை வருஷமா வெயிட் பண்ணி தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னாடி கரெக்டா ஒரு அவதூறு பரப்ப வேண்டியது..

பிரிக்கவே முடியாது

அது என்னன்னு உங்களுக்கே தெரியும். அதுவும் மக்கள் கிட்ட எடுபடல.. இதை மாதிரி எத்தனை சோதனைகள், வேதனைகள் நீங்கள் கொடுத்தாலும், இந்த திமுகவாலயோ.. பாஜகவாலயோ.. மற்றும் பலர்னாலயோ.. எந்த... வேற யாராலும் என்னை உங்க கிட்ட இருந்ந்து பிரிக்கவே முடியாது" என்று பேசினார்.

மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள்
மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள்

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை சங்கீதா தாக்கல் செய்து இருந்தார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும், இந்த விவகாரம் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது.

முதல்முறையாக வாய் திறந்தார்

இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரியிருந்தார். சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கு வரும் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடலூரில் விஜய்யின் நாளைய பிரசாரம் திடீர் ரத்து.. தவெக சொன்ன காரணத்தை பாருங்க
கடலூரில் விஜய்யின் நாளைய பிரசாரம் திடீர் ரத்து.. தவெக சொன்ன காரணத்தை பாருங்க

அன்றைய தினம் விஜய் - சங்கீதா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவி சங்கீதா தன்னிடம் இருந்து விவாகரத்து கோரியது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த விஜய், முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இது பற்றி மவுனம் கலைத்துள்ளார். அதிலும் வெளிப்படையாக தனது மனைவி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாகவே, விவகாரத்து விவகாரம் குறித்து விஜய் நெல்லை பிரசாரத்தில் பேசியுள்ளார். தனிப்பட்ட பிரச்சினையை அரசியல் மேடையில் பேசி அவதூறு பரப்ப சதி என்று எதிர்க்கட்சிகளின் மீது பழி போடுவது போல விஜய்யின் பேச்சு இருப்பதாகவும் இது எந்த வகையில் நியாயம் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்புவதை பார்க்க முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+