இந்த பொங்கல் நமக்கில்ல..வெறுப்பான விஜய் ரசிகர்கள்! தெறி ரீ-ரிலீஸும் இல்லையாம்! பின்வாங்கிய தாணு!
சென்னை: ஜனநாயகனுக்கு பதிலாக விஜயின் தெறி படம் ஜனவரி15ஆம் தேதி ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் தெறி ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தபடத்தின் தயாரிப்பாளர்ர் கலைப்புலி தானு கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
அரசியல் பின்னணியைக் கொண்டதாக பேசப்படும் இந்த படம், ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையால் அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், பொங்கல் வெளியீடும் கேள்விக்குறியாகியுள்ளது.

விஜய்
இந்த படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்ததுடன், படத்தை மீண்டும் மறுஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, படத் தயாரிப்பு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, மத்திய தணிக்கை வாரியம் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவில் உள்நோக்கம் இருப்பதாகத் தோன்றுகிறது எனவும், உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஜனநாயகன்
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். வசதவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி வாயிலாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். படத் தயாரிப்பு குழு தரப்பின் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹதகி மற்றும் சதீஷ் பராசரன் வாதிட்டனர்.
இடைக்கால தடை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படம் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாக வேண்டும் என நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரக் கூடாது என்றும், தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, நீதிபதிகள் 'ஜனநாயகன்' படத்தை ஜனவரி 21-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர்.
விஜய் ரசிகர்கள்
இந்த உத்தரவால், 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்க்கு ஆதரவாக பல நடிகர்களும் இந்தப் பொங்கலை கொண்டாடப் போவதில்லை எனவும், ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாள்தான் தங்களுக்கு பொங்கல் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஜனநாயகம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் நெருக்கடி உருவானது.
தெறி ரீ ரிலீஸ்
அதாவது ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகாததால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். பராசக்தியை வெளியிட முயன்றும் அந்த நிறுவனம் அவர்களுக்கு படத்தை தரவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக விஜய் நடித்த தெறி படத்தை ரீலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான தலைப்புலி தானு. இந்நிலையில், ஜனநாயகனுக்கு பதிலாக விஜயின் தெறி படம் ஜனவரி15ஆம் தேதி ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் தெறி ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தபடத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு கூறியுள்ளார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications