மகன்கள் மீது அப்படி கேர் எடுத்துக்கொண்ட விஜயகாந்த்! கடைசி வரை 2 விஷயத்தில் ஆளு ரொம்ப ஸ்டிரிக்ட்!
சென்னை: பெயர், புகழ், பணம், வசதி வாய்ப்பு என எதிலும் குறைச்சல் இல்லாத வாழ்க்கை இருந்த போதும், 2 விஷயத்தில் மட்டும் தனது மகன்களை மிடில் கிளாஸ் அப்பாக்களை போலவே ட்ரீட் செய்திருக்கிறார் விஜயகாந்த்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்லக்கூடாது, அப்படி சென்றாலும் நேரமே வீட்டுக்கு வர வேண்டும், செகண்ட் ஷோ படத்துக்கு போகக்கூடாது என இந்த 2 விஷயங்களிலும் கடைசி வரை மகன்களிடம் ஸ்டிரிக்டாவே இருந்திருக்கிறார் விஜயகாந்த். இதன்மூலம் என்ன வேணாலும் பண்ணுங்க, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்வியல் முறைகளை மகன்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தே கூறியிருக்கிறார். இதனிடையே விஜய பிரபாகரனும் சரி, சண்முகபாண்டியனும் சரி எந்த விஷயத்திலும் தங்கள் தந்தை விஜயகாந்தை பேச்சை மீறி நடந்துக் கொண்டதில்லை என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.
இரவு 10 மணிக்குள் பிள்ளை வீடு வந்து சேர வேண்டும் , இரவில் வெளியே போகக்கூடாது என ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தந்தை எப்படி தனது மகன் மீதுள்ள அக்கறை காரணமாக கூறுவாரோ அதே அக்கறையை தனது 2 மகன்களிடமும் காட்டியவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் மறைந்து 15 நாட்கள் ஆகியும் அவர் குறித்த சுவாரஸ்யமான புதுப் புதுத் தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தனை நாட்களாக எங்கே இருந்தீங்க எனக் கேட்கும் அளவுக்கு அவருடன் பழகியவர்கள், அவரிடம் வேலை பார்த்தவர்கள், பழைய நண்பர்கள் என பலரும் விஜயகாந்தின் குணாதிசயங்கள் பற்றி ருசிகரத் தகவல்களை கூறி வருகின்றனர்.
இதனிடையே விஜய பிரபாகரனுக்கு தேமுதிக இளைஞரணியில் விரைவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் எல்.கே. சுதீஷ் வசம் பிரேமலதாவிடம் உள்ள பொருளாளர் பதவி தரப்படலாம் எனவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications