நன்றி மறக்காத ரவிக்குமார்... ஒரு மாத ஊதியம் ஸ்டாலினிடம் அளிப்பு
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தனது ஒரு மாத ஊதியத்தை கலைஞர் அருங்காட்சியம் அமைப்பதற்காக வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மு.க.ஸ்டாலினும், அவரது சகோதரி செல்வியும் இணைந்து அதற்காக நிலமெல்லாம் வாங்கி பத்திரப்பதிவு பணிகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடித்தனர். இதையடுத்து அங்கு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தனது ஒரு மாத ஊதியத்தை கலைஞர் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளுக்கு நிதியாக அளித்துள்ளார்.
விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார். அங்கு அவரை சந்தித்த ரவிக்குமார் நிதி வழங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், ரவிக்குமாரின் கரத்தை பற்றி நன்றி கூறியுள்ளார். இதனிடையே நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர் ரவிக்குமார்.
அவரைப்போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்டோர் கலைஞர் அருங்காட்சியகத்துகாக இதுவரை நிதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் கலைஞர் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை முடித்து திறக்க திமுக திட்டமிட்டுள்ளது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications