சிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி!

சிங்கப்பூர் ரோட்டில் மகனை காண சென்ற தாய் ஒருவர் மிளகாய் காய வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகனை பார்க்க சிங்கப்பூர் சென்ற தாயின் நிலைமை- வீடியோ

    சென்னை: சிங்கப்பூரில் மகனை பார்க்க சென்ற தாய் ஒருவர், பிளாட்பாரத்தில் மிளகாய் வத்தலை காய வைத்து அதற்கு காவலாக பக்கத்திலேயே படுத்து தூங்கிய காட்சி மனதை உருக்குலைய வைத்துள்ளது.

    முன்பெல்லாம் வீட்டில் பெண்களுக்கு மிளகாய் அரைப்பது என்பதே பெரிய வேலை. இதற்காக மிளகாய், தனியா, மஞ்சள் பொருட்களை வாங்கி சுத்தப்படுத்துவர். பிறகு அதை வெயிலில் காய வைத்து எடுத்து, அதனை வாணலியில் லேசாக வாட்டி எடுத்து, அதனுடன் சில பொருட்களையும் வாசனைக்காக வறுத்து எடுப்பார்கள்.

    கடைசியில் அதற்கென இருக்கும் ஒவ்வொரு டப்பாக்களில் அதனை போட்டு மாவு மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து, அதனை ஒருபேப்பரில் சூடு போக காய வைத்து அதே டப்பாக்களில் 6 மாதம் தாங்குவது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்வர்.

    யாரும் செய்வதில்லை

    யாரும் செய்வதில்லை

    இதனை தன் மகன், மகள்களுக்கு பிரித்து தரும்போது பெற்ற தாயின் மன சந்தோஷம் யாராலும் உணர முடியாது. அம்மா கொடுத்த அந்த மிளகாய்தூள் வாசனையுடன் சேர்த்து பாசமும் ஆறு மாசத்துக்கு தாங்கும். நவீன உலகில் இதை இப்போது பெரும்பாலும் செய்வதில்லை.

    தூங்கி விட்டார்

    தூங்கி விட்டார்

    ஆனால் ஒரு தாய், சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் மிளகாய், மல்லி, மஞ்சள் போன்றவற்றை காயவைத்து அதற்கு பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்தார். உச்சி வெயில் மண்டையை பிளக்க களைப்பான அவர் பேப்பர் ஒன்றினை தரையில் விரித்து கொஞ்ச நேரத்தில் அப்படியே படுத்து தூங்கியும் விட்டார்.

    விதிமுறைகள்

    விதிமுறைகள்

    இதை போட்டோ எடுத்து, தனா டெல்டாகாரன் என்பவர் தனது பேஸ்புக்கில் போட்டு தன் கருத்தையும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

    தாய் அன்பு

    தாய் அன்பு

    பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை" என பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. தாய் அன்புக்கு ஏது இணை? அம்மான்னா அம்மாதான்!!

    மனது கஷ்டப்பட்டது

    மனது கஷ்டப்பட்டது

    அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+