Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரவும் வைரஸ் காய்ச்சல்..மிரட்டும் வெப்ப அலை..தமிழகத்தில் 1-9 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இன்புளுயன்சா என்3எச்2 வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சலும் பரவி வருவதால் பொது இடங்களில் நடமாடுபவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Virus fever, heat wave TN Government plans advance final examination for 1-9 students

நாட்டின் பல பகுதிகளில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வாகனம் ஓட்டுவது சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 100.5, நாமக்கல்லில் 100.4 என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.

Virus fever, heat wave TN Government plans advance final examination for 1-9 students

இந்த நிலையில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் தொடங்கி விட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Virus fever, heat wave TN Government plans advance final examination for 1-9 students

கடந்த 2020,2021ஆம் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களுக்கும் இறுதித்தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் போடப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்கள் ஜூன் முதல் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+