Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக பொங்கினது போங்கா?பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் போர்ஜரி என அம்பலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரத நாட்டிய கலைஞரும் அரசு இசைப் பள்ளியின் கலையியல் அறிவுரைஞருமான ஜாகீர் உசேன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் மோசடியானது; புனையப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில்தான் ஜாகீர் உசேன் மீதான புகார் புனையப்பட்டது என அம்பலமாகி இருக்கிறது.

Recommended Video

    Bharatanatyam Dancer Zakir Hussain-மீது பாலியல் புகார் கொடுத்த Karur Music Teacher *TamilNadu

    பாலியல் புகார்

    பாலியல் புகார்

    தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர், பரத நாட்டியக் கலைஞரான ஜகீர் உசேன். தமிழகத்தின் இசை பள்ளிகளில் ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்தார்; அத்துமீறி நடந்து கொண்டார் என அடுத்தடுத்து ஆசிரியைகளிடம் இருந்து புகார்கள் வந்தன.

    ஜாகீர் உசேன் மீதான புகார்?

    ஜாகீர் உசேன் மீதான புகார்?

    இது தொடர்பாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குநருக்கு கரூர் ஆசிரியை அனுப்பிய புகார் கடிதம் ஒன்றில், கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படி நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது என கூறியிருந்தார். இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் ஜாகீர் உசேன் மீது புகார் எழுந்தது.

    பாஜக தலைவர்கள் கொதிப்பு

    பாஜக தலைவர்கள் கொதிப்பு

    இதனையடுத்து ஜாகீர் உசேன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அடுத்த 24 மணிநேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கொதித்துப் பேட்டி கொடுத்தனர். ஜாகீர் உசேனை மனித மிருகம் என்றெல்லாம் கூட எச்.ராஜா விமர்சித்திருந்தார். அத்துடன் ஶ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜாகீர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போர்ஜரி புகார்கள்

    போர்ஜரி புகார்கள்

    இஸ்லாமியராக இருந்தாலும் இந்து கடவுள்களை வணங்குவதிலும் பரத நாட்டியத்தை வளர்ப்பதிலும் முனைப்புடன் திகழ்ந்தவர் ஜாகீர் உசேன். இஸ்லாமியர் என்பதற்காகவே கடுமையான விமர்சனங்களுக்குள்ளான ஜாகீர் உசேனுக்கு திமுக அரசுதான் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர் பதவியும் கொடுத்தது. இந்நிலையில் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் குறித்து பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரித்தது. இந்த விசாரணையில் ஜாகீர் உசேன் மீதான புகார்கள் அனைத்தும் மோசடியானவை; புனையப்பட்டவை என்பது அம்பலமாகி இருக்கிறது. இதனால் ஜாகீர் உசேன் விவகாரத்தில் பரபரப்பு தற்போது அடங்கி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+