ரகசிய அறை முழுக்க ஆணுறைகள், கஞ்சா, பாட்டில்.. நடிகை சித்ராவை கொன்றது ஹேமந்த்தான்.. நண்பர் பேட்டி!
சென்னை: "சிகரெட், குடி, கஞ்சா, பொம்பளைங்க.." இதுதான் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தின் பழக்கம் என அவரது நண்பர் உண்மைகளை போட்டு உடைத்துள்ளார்.
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு ஓராண்டு நினைவு தினம் வந்துவிட்டது. இரு முறை அவர் இல்லாமலேயே பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவிட்டது. காலங்கள் உழன்று சென்றாலும் இன்னும் சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் மட்டும் அவிழ்க்கப்படவில்லை.
இரு ஆண்டுகள் கழித்து தற்போது சித்ரா மரண வழக்கு மீண்டும் வெளியே வந்துள்ளது. தற்போது அவரது கணவர் ஹேமந்த் , சித்ராவின் மரணத்தில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்கிறார். மேலும் சிலரால் தனக்கு உயிருக்கு ஆபத்து என்றும் போலீஸில் புகார் அளித்துள்ளார்..

சித்ராவின் கணவர் ஹேமந்த்
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த்தின் நண்பர் ஒருவர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஹேமந்திற்கு வேலை வெட்டியெல்லாம் கிடையாது. சின்னத்திரையில் வளர்ந்து வரும் பெண்கள், விஜேக்களை மடக்கி போடுவார். அவர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பார்.

சித்ராவுடன் காதல்
அந்த வகையில்தான் சித்ராவை காதலித்தார். ஹேமந்த் வீட்டிலிருந்த பொருட்களை ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன். அதை தொடுவதற்கே எனக்கு உடல் கூச்சமாக இருந்தது. அறையில் ஒரு பெட்டி நிறைய ஆணுறைகள், கஞ்சா, பிரிட்ஜில் சரக்கு பாட்டில்கள்தான் இருந்தன.

ஜாலி
சித்ரா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இவர் ஜாலியாக குடித்துவிட்டு வேறு பெண்களுடன் இருப்பார். இதெல்லாம் சித்ராவுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. ஆனால் சித்ரா நல்ல பெண், அந்த பெண்ணை ஹேமந்த்தே அடித்துக் கொன்றிருக்கலாம். ஹேமந்த்தால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் நாங்கள் அவனை பற்றி வெளியே சொல்லாமல் இருந்தோம்.

ஹேமந்த்
ஹேமந்த் கடைசியாக ஒரு முறை அவரது நண்பருடன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்ததை கேள்விப்பட்டோம். நிறைய நகைகளை பெண்களிடம் இருந்து ஏமாற்றி பெற்றிருந்தார். என்னிடம் 2.75 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார். அது போல் 1000 கிராம் நகையையும் கொடுத்துள்ளோம். ஹோட்டலில் தங்கினால் அங்கிருந்த நிறைய பொருட்களை திருடிக் கொண்டு வந்து விடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications