அக்கா இல்லை... நினைத்துக்கொண்டே வந்து தனியாக வாக்களித்தேன் - சசிகலா கண்ணீர்
உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக தனியாக வந்து வாக்களித்தேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக தனியாக வந்து வாக்களித்தேன் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்தார். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜகம் செய்யக் கூடாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா வாக்களிக்க வந்தார். முதன் முறையாக ஜெயலலிதா இல்லாமல் தனியாக வந்து வாக்களித்தார் சசிகலா.

வாக்களித்த சசிகலா
தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, ''அக்கா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். வரும் போதே நினைத்துக்கொண்டேதான் வந்தேன். நான் என் அக்காவுடன் சேர்ந்துதான் வாக்களித்து இருக்கிறேன். இப்போது தனியாக வந்து வாக்களித்துள்ளேன் என்று கூறி கண் கலங்கினார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த சசிகலா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிப்பார். எப்போது வாக்களித்தாலும் ஜெயலலிதா உடன் வந்துதான் வாக்களிப்பார். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது கடைசியாக ஜெயலலிதாவும் சசிகலாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்குகளை பதிவு செய்தனர்.

ஓட்டு நீக்கம்
2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சசிகலா வாக்களிக்கவில்லை. போயஸ்கார்டனில் உள்ள வேதாநிலையம் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் அவரது ஓட்டு நீக்கப்பட்டது. அதேபோல இளவரசி உள்ளிட்ட போயஸ்கார்டன் முகவரியில் இருந்த அனைவரின் வாக்கும் நீக்கப்பட்டதால் கடந்த சட்டசபைத் தேர்தலில் சசிகலாவால் வாக்களிக்க முடியவில்லை.

தனியாக வாக்களித்த சசிகலா
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா, தி.நகரில் வசித்து வருகிறார். இதனையடுத்து இந்த முறை தனியாக தி. நகரில் வந்து வாக்களித்துள்ளார் சசிகலா. அதனால்தான் இது கஷ்டமான சூழல் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அராஜகம் செய்யக்கூடாது
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா, தி.நகரில் வசித்து வருகிறார். இதனையடுத்து இந்த முறை தனியாக தி. நகரில் வந்து வாக்களித்துள்ளார் சசிகலா. அதனால்தான் இது கஷ்டமான சூழல் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்யக்கூடாது தமிழக மக்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும் அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications