Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கொடி கம்பீரமா பறக்குது! ஆனா எங்க கேப்டன்! விஜயகாந்தைப் பார்த்து கண்கலங்கிய தேமுதிக தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நிலையைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Recommended Video

    தேமுதிக அலுவலத்தில் கையெடுத்து கும்பிட்ட விஜயகாந்த்.. உற்சாகத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள்!

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.

    நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது விரல் அகற்றப்பட்டது.

    விஜயகாந்த் உடல்நிலை

    விஜயகாந்த் உடல்நிலை

    மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது நல்ல நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.

    பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு

    பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு

    இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொது வெளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்றார் அது இன்றுதான். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.

    உற்சாகம்

    உற்சாகம்

    பல நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் விஜயகாந்த் வீட்டிலேயே இருந்த நிலையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்ததோடு வெற்றி குறி காட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த பல தொண்டர்கள் திரைப்படங்களை வில்லனை மாறி மாறி பந்தாடி பக்கம் பக்கமாக வீர வசனம் பேசிய எங்கள் கேப்டனா இது என கண்ணீர் விட்டனர்.

    கண்ணீர் விட்ட தொண்டர்கள்

    கண்ணீர் விட்ட தொண்டர்கள்

    ஒரு தொண்டர் விஜயகாந்தை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீரத்தோடு வருவார் எனவும் தொண்டர்கள் வேண்டிக் கொண்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+