ஸ்டாலின் சுட்டு விரலை நீட்டினால்.. உணர்ச்சிபூர்வமாக பேசிய விபி கலைராஜனுக்கு திமுக அளித்த பரிசு
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்த விபி கலைராஜன் திமுக இலக்கிய அணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த விபி கலைராஜன், டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்த போது அமமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி பி கலை ராஜன் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த மார்ச் மாதம் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கலைராஜன் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக விபி கலைராஜன் கடந்த மார்ச் 21ம் தேதி இணைத்துக்கொண்டார்.
அப்போது பேசிய விபி கலைராஜன் திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தகுதியுடைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் தலைமை சரியானது என்பதால் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
முதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்காருனு இன்னும் 2 நாள்ல சொல்றேன்.. தங்கதமிழ்ச் செல்வன் பகீர் பேச்சு
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக சட்டதிட்ட விதி :31 பிரிவு:10 அ-ன்படி கழக இலக்கிய அணி இணைச்செயலாளராக விபி கலைராஜன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார் என உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் அமமுகவில் இருந்து விலகிய பின் திமுகவில் இணைந்த தங்கதமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு திமுகவில் வழங்கப்பட்டுள்ளது.